कोशिश गोल्ड - मुक्त
காலிஸ்தான் பயங்கரவாதத்தின் நெடிய நிழல்!
Dinamani Puducherry
|June 27, 2025
காலிஸ்தான் தனிநாடு கோரி கனடாவில் இயங்கிவரும் சீக்கிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவின் அமைதியைச் சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றன.
1985, ஜூன் 23-இல் ஏர் இந்தியா-182 ‘கனிஷ்கா’ விமானம் லண்டன் வழியாக புது தில்லி, மும்பையை இறுதி இலக்காகக் கொண்டு கனடாவின் மான்ட்ரியால் நகரிலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் 31,000 அடி உயரத்தில் இந்த விமானம் பறந்தபோது வெடித்துச் சிதறியது. சரக்குகள் வைக்கும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து விமானத்தில் இருந்த 329 பேர் உயிரிழந்தனர்; இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் உள்பட கனடா குடிமக்கள் 268 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 27 பேர், 22 இந்தியர்கள், விமான ஊழியர்கள் என அதில் பயணித்த யாரும் உயிர்பிழைக்கவில்லை.
2001 செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முந்தைய மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். கனடா வரலாற்றிலேயே மிகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
அந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானத்தை இலக்கு வைத்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் நரிட்டா விமான நிலைய சரக்குச் சேமிப்பகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தவறுதலாக முன்கூட்டியே வெடித்து இரு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
இந்த இரு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாகப் பின்னர் நடைபெற்ற விசாரணையில், காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்னிறுத்தி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் சீக்கியப் பிரிவினை அமைப்பான ‘பப்பர் கல்சா’ இருந்தது தெரியவந்தது.
यह कहानी Dinamani Puducherry के June 27, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Puducherry से और कहानियाँ
Dinamani Puducherry
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Puducherry
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Puducherry
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size
