कोशिश गोल्ड - मुक्त
கூட்டம் : குழப்பம் : மரணம்
Dinamani Nagapattinam
|June 30, 2025
நாம் என்ற எண்ணம் இல்லாமல் தான், தனது என்று எண்ணி விட்டில் பூச்சி தீயில் விழுந்து மரணிப்பதுபோல தன்னுடைய அவசரக்குடுக்கைதனத்தால் கூட்டத்தில் சிக்கி வாழ்க்கையை சிலர் இழக்கிறார்கள். இதற்கு நிர்வாகக் கோளாறும், ஆட்சி செய்வோரின் அலட்சியமும், காவலர்களின் திறமையின்மையும் காரணங்கள்.
ஒருவர் விபத்தில் மரணிக்கலாம், கொலையுண்டு மரணிக்கலாம், விஷ ஜந்துக்கள் தீண்டி மரணிக்கலாம்-இவ்வாறு காரணங்கள் மாறுபட்டாலும் மரணம் என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத உண்மை. ஆனால், ஒரு கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே தள்ளப்பட்டு, சிக்குண்டு, மிதிபட்டு, அடிபட்டு, மூச்சுத்திணறி மரணிப்பது எவ்வளவு கொடுமை.
மனிதனை எருமை மாட்டால் மிதிக்கவிட்டு கொல்வதை கருட புராணத்தில் இருந்து எடுத்து 'அந்நியன்' படத்தின் இயக்குநர் சங்கர் 'அண்டகூபம்' என்று விளக்குகிறார். நம்மை ஒருவர் இடித்தோ, மிதித்தோ செல்லும்போது எருமை மாடு என்று நாம் திட்டும் பழக்கம் கருட புராணத்தின் நீட்சிதானோ என்னவோ...'கோழி மிதித்து குஞ்சு சாகாது' என்ற பழமொழி கூட்டத்தில் மிதிபட்டு சாகும் மனிதனுக்குப் பொருந்தாது!
இதுபோன்ற மரணங்களின் இடங்கள் மாறுபட்டாலும், அவற்றுக்கான அடிப்படை காரணங்கள் ஒன்றே ஒன்றுதான். இதுபோன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் காலம்காலமாய் கேளிக்கை இடங்களில் மட்டுமல்ல, பொது இடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பணக்கார இஸ்லாமிய பெரியவர் திண்டுக்கலில் பக்ரீத்தின்போது ஏழைகளுக்கு உணவும், உடையும் வழங்க முற்பட்டார். அங்கு கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி சில ஆண்களும், பெண்களும் இறந்தனர். நல்லது செய்ய நினைத்து சோகத்தில் முடிந்த அந்த நிகழ்வு குறித்து அந்தப் பெரியவர் கண்ணீர் பேட்டி அளித்தார்.
கடந்த 1990-இல் மெக்கா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 1,426 பேர் உயிரிழந்தனர். 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி ஹஜ் பயணத்தின்போது மதினா கூட்ட நெரிசலில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள் ஹிந்து மத புனிதத் தலங்களிலும் தொடர்கின்றன. இதில் இருந்து யாரும் பாடம் படித்ததாகத் தெரியவில்லை. 30.9.2008-இல் நவராத்திரி முதல் நாள் அன்று ஜோத்பூர் சாமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசலில் 224 பேர் உயிரிழந்தனர்; 475 பேர் காயமடைந்தனர்.
यह कहानी Dinamani Nagapattinam के June 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Nagapattinam से और कहानियाँ
Dinamani Nagapattinam
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Translate
Change font size
