कोशिश गोल्ड - मुक्त
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
Dinamani Madurai
|November 02, 2025
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
ஒவ்வொரு திரைப்பட ஜானர்களுக்கும் ஒரு சீசன் அமையும். ஒரு பேய்ப்படம் ஹிட் அடித்தால், அதைத் தொடர்ந்து பேய்ப் படங்களாக வரும். அது போலவே காதல் படங்கள் வெற்றி பெற்றால், காதல் பற்றிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.
ஆனால், பயோபிக் திரைப்படங்களைப் பொருத்தமட்டில் அதற்கென தனி சீசன் எதுவும் கிடையாது. எவர்க்ரீனாகத் தொடர்ந்து எப்போதும் பயோபிக் திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கும். ஹாலிவுட்டில்தான் முதன்முதலாக பயோபிக் திரைப்படங்கள் வெளியாயின. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பயோபிக் என்ற வகையிலான சினிமாவை எடுக்கத் தொடங்கியது ஹாலிவுட்.
அப்படி ஆப்ரகாம் லிங்கனுடைய பயோபிக் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டது ஹாலிவுட். நாளடைவில் பயோபிக் திரைப்படங்களின் வடிவங்களும் மாற்றத்தை எட்டியது.
இந்தியாவில் 1950-களில் புராணக் கதைகளைத்தான் முதன்முதலில் எடுத்து வெளியிட்டார்கள். அதன் பிறகுதான் உண்மையான பயோபிக் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் வெளியாகத் தொடங்கின. இப்படித்தான் 1965-ஆம் ஆண்டு பகத் சிங்கின் பயோபிக் திரைப்படமாக 'ஷாகீத்' திரைப்படம் வெளியானது. இதன் பிறகு பயோபிக்கின் வடிவம் சற்றே மாற்றத்தை எட்டியது.
பெரும்பாலும் இந்தியாவின் முக்கிய தலைவர்களின் கதைகளும், முக்கிய விளையாட்டு வீரர்களின் கதைகளும் படமாக எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக இருக்கும் பலரின் கதைகளை பாலிவுட் எடுக்கும்போது அது இந்தியா முழுவதும் கவனம் பெற்றது.
यह कहानी Dinamani Madurai के November 02, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Madurai
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Madurai
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Madurai
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Madurai
குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.
1 mins
November 02, 2025
Dinamani Madurai
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Listen
Translate
Change font size
