कोशिश गोल्ड - मुक्त
எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!
Dinamani Karur
|May 08, 2025
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
-
உலகம் முழுவதும் இன்று எண்மவழி (டிஜிட்டல்) சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எண்மவழி சேவைகள் என்பது கணினிகள், இணையம், கைப்பேசி மற்றும் பிற மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்கள் பெறுகிற சேவைகளைக் குறிக்கிறது. இதில் பொதுமக்களுக்கான அரசு சேவைகள், வணிகம், வங்கிகளுடனான பணப் பரிவர்த்தனைகள், சமையல் எரிவாயு உருளைகளைப் பெறுதல், பயண வசதிகளை மேற்கொள்ளுதல் ஆகிய அனைத்து முறைமைகளும் அடங்கும்.
இந்த நிலையில், கண்ணைச் சிமிட்ட முடியாததால், வங்கிக் கணக்கு தொடங்க முடியாதவர்களும், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கின் மூலம், அனைத்து எண்ம (டிஜிட்டல்) வாய்ப்புகளும் பெறுவது என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று அதிமுக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாதைச் சேர்ந்த பிரக்யா பிரகன் என்பவர் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர். தனியாக தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, அமிலம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார். இவர் தனக்கென வங்கிக் கணக்கைத் தொடங்க முற்பட்டுள்ளார். 'உங்கள் வாடிக்கையாளரைத்தெரிந்து கொள்ளவும்' (கேஒய்சி) எனப்படும் வாடிக்கையாளர் குறித்த தகவல்களைப் பதிவு செய்யும்போது கண்ணை சிமிட்டும்படி அந்தத் தனியார் வங்கியில் கூறியுள்ளனர். ஆனால், அமிலம் வீசப்பட்டதால், முகச் சிதைவு ஏற்பட்டு, அவரால் கண்ணை சிமிட்ட முடியவில்லை. இதனால், வங்கிக் கணக்கை தொடங்க முடியவில்லை. தனது கைப்பேசிக்கு சிம் கார்டு வாங்கச் சென்ற போதும், இதே போன்ற அனுபவத்தை அவர் சந்திக்க நேர்ந்தது.
यह कहानी Dinamani Karur के May 08, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Karur से और कहानियाँ
Dinamani Karur
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Karur
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Karur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Karur
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Karur
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Karur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Karur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Karur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Karur
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Karur
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Translate
Change font size
