कोशिश गोल्ड - मुक्त
வளரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-சிங்கப்பூர் உறுதி
Dinamani Chennai
|August 27, 2024
வளா்ந்து வரும் துறைகளான எண்மமயமாக்கம், திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி, சுகாதார வசதிகள் மற்றும் மருந்துகள், அதிநவீன உற்பத்திமுறை, இணைப்பு வசதிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியாவும் சிங்கப்பூரும் உறுதிபூண்டுள்ளன.
-
இந்தியா-சிங்கப்பூர் இடையே அமைச்சர்கள் அளவிலான 2-ஆவது வட்டமேஜை (ஐஎஸ்எம்ஆர்) கூட்டம், சிங்கப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், இந்திய தரப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வாணிகம்-தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கொண்ட குழு பங்கேற்றது. சிங்கப்பூர் தரப்பில் அந்நாட்டின் துணை பிரதமரும் வாணிகம்-தொழில் துறை அமைச்சருமான கன் கிம் யாங் தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகம், எண்ம மேம்பாடு, தகவல் மற்றும் உள்துறை இணையமைச்சர் ஜோஸ்பின் டியோ உள்ளிட்டோர் கொண்ட குழு கலந்துகொண்டது.
இக்கூட்டத்தில், எதிர்கால முக்கியத்துவம் கொண்ட வளரும் துறைகளில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஐஎஸ்எம்ஆர் அமைப்புமுறையின் கீழ் அடையாளம் காணப்பட்ட 6 முக்கிய ‘தூண்களான’ எண்மமயமாக்கம், திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி, சுகாதார வசதிகள் மற்றும் மருந்துகள், அதிநவீன உற்பத்திமுறை, இணைப்பு வசதிகள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
यह कहानी Dinamani Chennai के August 27, 2024 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Chennai से और कहानियाँ
Dinamani Chennai
இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா
எலான் மஸ்க் கருத்து
1 min
December 02, 2025
Dinamani Chennai
வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு
ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு
இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
1 min
December 02, 2025
Translate
Change font size

