Essayer OR - Gratuit

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மே தின விழா

Dinamani Virudhunagar

|

May 02, 2025

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சார்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை/மானாமதுரை/காரைக்குடி/ராமேசுவரம், மே 1: சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சார்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை சிவன் கோயில் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் சிவகங்கை சீமை அமைப்பு சாராக் கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய சங்கம், சிவகங்கை சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன், மதுரை சரவணா மருத்துவமனை ஆகியவை இணைந்து பொது, இருதய பரிசோதனை முகாமை நடத்தின. இதில் சிவகங்கை நகரைச் சேர்ந்தவர்கள் பரிசோதனைகள் செய்து கொண்டனர். முன்னதாக, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம். துரை ஆனந்த் ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்து, கட்டடத் தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.

சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மருத்துவமனை மேலாளர் கார்த்திகைகுமார், பொறியாளர்கள் பாரதிதாசன், எஸ்.எம். சுந்தரமாணிக்கம், சிவகங்கை தொழிலாளர் நல வாரிய சங்க நிர்வாகிகள், சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேவகோட்டையில்..

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் வ.உ.சிதம்பரம் பிள்ளை பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். புரவலர் முருகேசன், பொருளாளர் ஜானகிராமன் செல்வராஜ் ஸ்தபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்

'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Translate

Share

-
+

Change font size