Essayer OR - Gratuit

நெகிழி மாசுபாடு ஆயுளைக் குறைக்கும்!

Dinamani Vellore

|

June 06, 2025

ஒவ்வோர் ஆண்டும் 100 கோடி டன் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் கடலில் கலப்பது, நீண்டகால அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எச்சரிக்கை மணி; இந்தக் கழிவு கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும்; மேலும், உணவுச் சங்கிலியையும் பாதிக்கிறது; இறுதியில் மனிதர்களையும் பாதிக்கிறது.

- நெல்லை சு.முத்து

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ், 1973 முதல் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2025) உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தில், உலக அளவில் நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த கொரிய குடியரசு முடிவு செய்துள்ளது.

வளரும் நாடுகளில் தினமும் 50 லட்சம் மக்கள் சுற்றுச்சூழல் நச்சால் பாதிக்கப்படுகின்றனர்; மேலும், வளரும் நாடுகளில் ஏற்படும் இறப்புகளில் 25 சதவீதம், சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகின்றன. எரிமலைகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவைவிட (கார்பன் டை ஆக்சைடு) 60 மடங்கு அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு, மனித நடவடிக்கைகள் மூலம் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகிறது.

கரியமிலவாயு, கந்தக அமிலம், ஹைட்ரஜன் சல்பைடு, ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரஜன் ஃபுளோரைடு உள்ளிட்ட பல்வேறு வாயுக்களையும் துகள்களையும் வெளியிடுவதன் மூலம் வளிமண்டல மாசுபாட்டுக்கு எரிமலைகளும் பங்களிக்கக்கூடும்.

இது அமில மழை, புகைமூட்டத்துக்கு வழிவகுக்கும்; மேலும், மனித ஆரோக்கியம், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடும். காட்டுத் தீ, தூசு புயல்கள் மற்றும் தாவரங்களிலிருந்து ஆவியாகும் கரிம சேர்மங்களின் இயற்கையான உமிழ்வு போன்ற பிற இயற்கை மூலங்களும் வளிமண்டல மாசுபாட்டுக்கு காரணமாகின்றன.

காற்றில் கலக்கும் கரியமில வாயுவை உள்வாங்கி நிலத்தின் நீரையும் உறிஞ்சி, பின் தன்வசம் இருக்கும் பச்சையத்தில் சூரிய ஒளியில் மாவுச்சத்து தயாரிக்கும் ‘இயற்கைச் சமையலறை’யான தாவரங்களை கூடுதலாக வளர்க்க வேண்டும்.

இயற்கை மரங்களைவிட வளி மண்டலத்திலிருந்து கரியமில வாயுவை அரித்து எடுக்க 1,000 மடங்கு அதிக திறன்கொண்ட ‘இயந்திர மரங்களை’ ஓர் அமெரிக்க ஆய்வகம் உருவாக்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வடிவமைப்பு, பொறியியல் பணிகளுக்குப் பிறகு, அயர்லாந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ‘மரப்பண்ணைகளை’ உருவாக்க மாதிரியை வடிவமைத்து வருகிறார்கள்.

PLUS D'HISTOIRES DE Dinamani Vellore

Dinamani Vellore

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Vellore

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Vellore

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Vellore

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Vellore

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Vellore

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

பிரதமர் மோடி பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கு துன்புறுத்தலா?

time to read

1 mins

November 01, 2025

Translate

Share

-
+

Change font size