Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

காந்தியம் என்னும் சத்தியப் பெரும்பயணம்

Dinamani Chennai

|

June 08, 2024

இந்திய விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற வீரா்கள் பங்கெடுத்துத் தங்களின் இன்னுயிரை ஈந்து, புகழ் பெற்றிருந்தபோதும் மகாத்மா காந்திக்கு மட்டும் ஒரு தனிப்பெருமை எக்காலத்தும் நிலைக்கிறது. இத்தனைக்கும் அவா் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே வெளிப்படுத்தியிருந்தாா்.

காந்தியம் என்னும் சத்தியப் பெரும்பயணம்

அவா், தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களைச் ‘சத்திய சோதனை’ என்ற பெயரில் வரலாறாக்கியபோது, ‘இக்கதை ஒரு சுயசரிதையாகவே அமையும் என்பது உண்மை...ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு ‘நாகரிக’ உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் ‘மகாத்மா’ பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒருகண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை’ என்று எளிமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாா்.

பரந்துபட்ட இந்திய தேசத்தின் தந்தை என்று அவா் தன்னை எப்போதும் அழைத்துக் கொண்டதே இல்லை. லூயி பிஷா் சொல்வதைப்போல, ‘பொன், பொருள், அதிகாரப் பதவி, பல்கலைக்கழகப் பட்டம், விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் ஏற்படும் புகழ் ஆகிய எந்தவொன்றும் இல்லாத, ஒரு முழத் துண்டுடன், ஒரு சாதாரணக் குடிமகனாகவே திகழ்ந்தாா்.’

போா்பந்தரில் பிறந்த ஒரு சாதாரண இந்தியா் இவ்வுலக வாழ்வை நீத்த வேளையில், அமெரிக்க அதிபா் ட்ரூமன், பிரிட்டிஷ் அரசா், ஃபிரெஞ்சு அதிபா், கான்டபெரி ஆா்ச்பிஷப், போப் பயஸ், லண்டன் நகரத் தலைமை ராபி, திபெத்தின் தலாய் லாமா ஆகியோருட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிற நாட்டுப் பெருமக்கள் இந்தியாவுக்கு அனுதாபச் செய்தி அனுப்பினா்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை காந்தியடிகளுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகத் தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது. பிரிட்டனின் பிரதிநிதி பிலிப் நோயல்பேக்கா் ‘திக்கற்றவா்க்கும், துணையற்றவா்க்கும், வாழ்வில் அனைத்தையும் இழந்தவா்க்கும் உறுதுணையாக வாழ்ந்தவா்’ என்று காந்தியைப் பற்றிப் புகழ்ந்து பேசினாா். இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?

பிரபஞ்சத்தின் தோற்றத்தின்போது உருவான சத்தியத்தின் வடிவம் காலம்தோறும் ஒரு புதிய மனிதனை உருவாக்குகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் இவ்வாறு பல பாத்திரங்களை நாம் கண்டிருக்கிறோம். அத்தகைய சத்தியத்தின் திருவுருதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய இக்கட்டு நோ்ந்த காலத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற பெயரில் தோற்றம் பெற்றது.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்

மத்திய அரசு புதிய உத்தரவு

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நாட்டை விட்டு வெளியேறுங்கள்

வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size