Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

ஏழைகளுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்

Dinamani Chennai

|

February 20, 2024

6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

ஏழைகளுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்

குடிசையில்லா தமிழ்நாடு’ இலக்கை எட்டும் வகையில், ஏழைகளுக்கு 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ரூ.1,000 அளிப்பது போன்று, உயா்கல்வி பயிலச் செல்லும் மாணவா்களுக்கும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏழைக் குடும்பங்களின் வறுமையைப் போக்க புதிய திட்டம் உள்பட குடிமக்கள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதிநிலை அறிக்கை: வரும் நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பேரவை மண்டபத்துக்கு அவா் வந்தாா். அவரை பேரவை உறுப்பினா்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனா். இதைத் தொடா்ந்து, முக்கிய அறிவிப்புகள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை அவா் தாக்கல் செய்தாா்.

8 லட்சம் கான்கிரீட் வீடுகள்: ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எட்டும் வகையில், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

முதல்கட்டமாக, வரும் நிதியாண்டில் (2024-25) ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும். ஏழை, எளிய மக்கள் தங்களது கனவு இல்லங்களை அவா்களே கட்டிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் வரும் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் ரூ.3,500 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

அறிவியல்பூா்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தோ்வு முறை எனக் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டது இந்தப் புதிய திட்டம்.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்

மத்திய அரசு புதிய உத்தரவு

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நாட்டை விட்டு வெளியேறுங்கள்

வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'

time to read

1 min

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size