Religious-Spiritual
DEEPAM
காற்றாக வந்தருளும் காத்தாயி!
நாகை மாவட்டம், கீழையூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில். சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் பிரதான தெய்வமாக வீற்றிருக்கும் காத்தாயி அம்மனையும், நம்பியவர்க்கு நல்லருள் புரியும் பச்சையம்மனையும் மாரியம்மனையும் வழிபடுவோர்க்கு வேண்டுவதெல்லாம் வேண்டியபடி நடந்தேறுகின்றது.
1 min |
February 20, 2021
DEEPAM
அமாவாசையில் தோன்றிய நிலவு!
'இந்த உலகில் வாழ ஒருவருக்குக் கண்டிப்பாக கள்ளி, செல்வம், நெஞ்சில் வஞ்சமில்லாத அன்பர்களின் கூட்டுறவு, எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாத மனம் முதலியன வேண்டும். இவற்றைத் தருவது திருக்கடையூர் அபிராமி அன்னையின் மலர் சூடியக் கூந்தலும், அவளது அருள் ததும்பும் விழியோரப் பார்வையும்தான்' என்கிறார் அபிராமி பட்டர்.
1 min |
February 20, 2021
DEEPAM
வேலவனின் வித்தியாசமான கோலங்கள்!
நாகை மாவட்டம், கோடியக்கரையில் உள்ள கோடியக்காடு குழகேசர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகப்பெருமான், வேலுக்கு பதிலாக கையில் அமிர்த கலசம் ஏந்திய அபூர்வக் கோலத்தில் காட்சி தருகிறார்.
1 min |
February 05, 2021
DEEPAM
ஸ்ரீ குழந்தை வேலப்பர்!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமல்லவா?!
1 min |
February 05, 2021
DEEPAM
வெற்றித் திருநாளில் வேலாயுதன் வழிபாடு!
நட்சத்திர மண்டலங்கள் இருபத்தியேழில் எட்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது பூசம், மாதம்தோறும் பூசம் நட்சத்திர தினம் வந்தாலும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு.
1 min |
February 05, 2021
DEEPAM
ருத்ர பூமியில் தியானம்!
அனைத்து மகான்களும் பிறவியெடுக்கும்போது நம்மைப் போல் சாதாரண மனிதர்களாகத்தான் பிறக்கிறார்கள். அவர்கள் பெரியவர்களாக வளர வளரத்தான் அவர்களின் மகத்துவம் வெளிப்படுகிறது.
1 min |
February 05, 2021
DEEPAM
பொங்கணும் பொங்கச் சோறு!
ஆன்மிகம் என்பது நம்பிக்கையின் நல்விளக்கு. அவரவர் நம்பிக்கை அவரவர் ஆன்மிகம். ஆசிரியர் மணிவாசகம் அழகாகச் சொல்வார். ஒவ்வொரு மனசும் ஒரு கேஸட் மாதிரி. அதில் அவங்கவங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை நம்புவது பிடித்த பாடலைப் பதிந்துகொள்வது போன்றது.
1 min |
February 05, 2021
DEEPAM
பஞ்சபூதத் தத்துவ விளக்கம்!
வேதாத்திரி மஹரிஷியின் மிகவும் சக்தி வாய்ந்த ஐந்தொழுக்க பண்பாடு உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம், இவற்றை மனிதப் பிறவியெடுத்த அனைவரும் அடைந்தாகவேண்டும் என்பதாகும். இதனாலேயே சுவாமிஜி யாரை வாழ்த்தினாலும் இந்த ஐந்தையும் பெற்று வாழ்க என்று வாழ்த்துவார்கள். மனவளக்கலை அன்பர்களையும் அவ்வாறு வாழ்த்தச் சொல்லி மகிழ்வார்கள்.
1 min |
February 05, 2021
DEEPAM
பச்சிளம் குழந்தையாக மாறிய பாலமுருகன்!
அந்நியர் படையெடுப்பின் காரணமாக திருப்போரூர் முருகன் கோயிலை நிர்வகித்தவர்கள் மூலவர் சிலையை கல் திரையிட்டு மறைத்தனர். அந்தச் சிலை நாளடைவில் மலையடிவார வேப்ப மரத்தடி புற்றில் புதைந்து மறைந்தது. நாளடைவில் அமைதி திரும்பியதும், கோயில் கருவறையில் வேறொரு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
1 min |
February 05, 2021
DEEPAM
சர்வரோக நிவாரணி நாகராஜர் மண் பிரசாதம்!
பார்க்கும் திசையெல்லாம் பச்சை விரித்தாற் போன்று வயல்வெளிகளும், ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும், தோப்புகளாக நிறைந்த வாழை மரங்களும் சூழப்பெற்ற வளம் நிறைந்த பூமியான நாகர்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு நாகராஜர் திருக்கோயில்.
1 min |
February 05, 2021
DEEPAM
குற்றம் பொறுத்தருளும் கோமகன்!
காவிரியின் வடகரையின் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 27ஆவதாகப் போற்றப்படுவதும் ஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குவது திருக்கருப்பறியலூர் ஆகும். இந்தத் தலத்துக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. பிறவிக்கு ஏதுவாகிய கன்மம் கெடுதலால், 'கன்மநாசபுரம்' என்றும், சூரியன் வழிபட்டதால், தலைஞாயிறு' என்றும், இந்த மலைக்கோயிலில் சட்டைநாதர் வீற்றிருப்பதாலும் சீர்காழிக்கு மேற்கே இருப்பதாலும், "மேலைக்காழி' என்றும், பரஞானத்தை அருளி, பிறவி வேர் அறுப்பதால், ‘திருக்கருப்பறியலூர்' என்றும் வழங்கப் பெறுகிறது.
1 min |
February 05, 2021
DEEPAM
கிரக தோஷம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்!
தஞ்சை மாவட்டம், வடக்கு வீதியில் உள்ளது ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேத ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மூலவராக அருள்புரிந்து வருகிறார்.
1 min |
February 05, 2021
DEEPAM
காலம் கடந்தவள் மஹாகாளி!
பிரம்மனால் துதிக்கப்பட்ட யோக நித்ரா தேவியானவள், மஹாவிஷ்ணுவினுடைய கண், வாய், மூக்கு, கை, இருதயம், மார்பு போன்ற அங்கங்களிலிருந்து பத்து முகங்கள், பத்து கரங்கள், பத்து பாதங்கள், கருத்த திருமேனி, அகன்ற முப்பது கண்கள், வெளியில் தெரியும் தெற்றுப் பற்கள் என பயங்கர ரூபத்துடன் வலது கரத்தில் சங்கு, சூலம், கதை, வானம், கத்தியோடு இடது கையில் சங்கு, பூசுண்டீம், பரிகம், வில், மனிதத் தலை இவற்றோடு மஹாகாளி என்ற வடிவில் வெளிப்பட்டாள்.
1 min |
February 05, 2021
DEEPAM
கல்லாய் சமைந்த கார்த்திகேயன்!
தட்சனின் மகள் தாட்சாயணி! அவளுக்கு சிவன் மீது விருப்பம் எழு கிறது . நட்சனுக்கு அது பிடிக்க வில்லை. இருந்தாலும், மனதை மாற்றிக்கொண்டு சிவனை மருமகனாக்கிக் கொள்கிறான்! ஆனால், அதேசமயம் சிவனை மதிக்கவில்லை.
1 min |
February 05, 2021
DEEPAM
அரங்கனை அலங்கரிக்கும் பாண்டியன் கொண்டை!
ஸ்ரீரங்கத்தில் உறையும் திருவரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை காண்டை. முக்கியக் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே தரிசனத்துக்கு வெளியே வருவார். அரங்கனே தனது பக்தர்களில் ஒருவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொன்னாராம். அப்படி அரங்கன் தேர்ந்தெடுத்த அந்த பக்தர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமிகள்.
1 min |
February 05, 2021
DEEPAM
பகவானின் கருணை மகத்துவம்!
முன்னொரு காலத்தில் போதனா என்ற பரம் பக்தர் ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தார். கல்வியில் சிறந்த அவர் நாள்தோறும் பகவானின் சரித்திரத்தைப் பணிவுடனும் பக்திப் பரவசத்துடனும் பிரவசனம் செய்வது வழக்கம். அவரது சொற் பொழிவை பாமரர்களும் படித்தவர்களும் விரும்பிக் கேட்பார்கள்.
1 min |
January 20, 2021
DEEPAM
மகரசங்கராந்தியில் கங்கா ஸ்நானம்!
மேற்கு வங்காளம், பர்காலி மாவட்டத்தில் உள்ளது கங்காசாகர் தீவு. இது, 43 கிராமங்களையும் சுமார் 1,75,000 மக்கள் தொகையும் கொண்ட பகுதி! சுந்தர்பன் காடுகள் சார்ந்த நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தாலும், இங்கு புலிகளோ தண்ணீரில் மரங்களோ கிடையாது. கங்காசாகர் கடலில்தான், மகர சங்கராந்தியன்று கங்கை வந்து கலந்ததாக ஐதீகம்!
1 min |
January 20, 2021
DEEPAM
அணையாத ஞான தீபம்!
பூந்தமல்லி, கண் பார்வையற்றோர் பள்ளியாசிரியர் ஒருவர், சிவாஸ்தானத்தில் மகாசுவாமிகள் தங்கி யிருந்தபோது வந்து தரிசனம் செய்தார்.
1 min |
January 20, 2021
DEEPAM
ஆயர்பாடி மாளிகையில்...
புகழின் உச்சியில் இருக்கும்போது மனிதனுக்கு அகந்தை தலைதூக்கும். அப்படியான கணத்தில் தன்னைத் தணிக்கை செய்து கொள்பவனே சிறக்கிறான். மண்ணில் பிறவியென்பது கடல் போல் தோற்றமளித்தாலும், அது சிறுபொழுதுக்கடன். சட்டென்று தீர்ந்து விடுகிற குமிழிக் காற்று.
1 min |
January 20, 2021
DEEPAM
அனுமன் சாலீஸா!
அனுமன் ஜயந்தியன்று ஆஞ்சனேயரை துதிக்கும் வகையில் சாலா பாராயணம் செய்வது சகல நலன்களையும் பெற்றுத்தரும். அன்று அதிகாலை நீராடி, தூய உள்ளத்துடன் ஆஞ்சனேயரை யாணிக்க வேண்டும்.
1 min |
January 20, 2021
DEEPAM
சொந்த வீடு அருளும் ஸ்ரீ பூலோகநாதர்!
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் திருத்தலத்தில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ பூலோகநாதர் திருக்கோயில். ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் இக்கோயில், பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்ததாக விளங்குகிறது.
1 min |
January 20, 2021
DEEPAM
கந்த சஷ்டி விரதம் தொடங்கிய திருக்கோயில்!
முருகப்பெருமானை வழிபடும் விரதங்களில் மிகவும் முக்கியமானது கந்த சஷ்டி விரதம். இதை முதன்முதலில் பாம்பன் சுவாமிகள் தொடங்கிய தலம், பூலோக கயிலாயமாக விளங்கும் தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்துக்குக் கிழக்கே எழில் கொஞ்சும் கிராமமான பின்னத்தூர் ஆகும்.
1 min |
January 20, 2021
DEEPAM
லட்ச தீபத் திருவிழா!
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராமராஜ்யா ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஸ்ரவணம் அன்று (திருவோணம் நட்சத்திரம்) பசு நெய் கொண்டு ஏராளமான தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர். இது மிகவும் வியப்பூட்டுகிற, சிறப்புக்குரிய நிகழ்வாகும்!
1 min |
January 20, 2021
DEEPAM
அருவமாய் அருளும் மா ஆகர்ஷணி தேவி!
ஜாம்ஷெட்பூரிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் சரைகேலா-கர்சாவான் தேசிய நெடுஞ்சாலையில் சரைகேலா டவுனிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது பந்திராம் கிராமம்.
1 min |
January 20, 2021
DEEPAM
ஆதவனை ஆராதிப்போம்!
அனைவர் மனத்திலும் ஆனந்தத்தையும், நம்பிக்கையையும் ஊட்டு கின்ற அற்புத மாதமாக விளங்குகின்றது தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று மக்களால் பல காலமாகச் சொல்லப்படுகின்ற வாசாமே எல்லோருக்கும் ஒரு புதிய நம்பிக்கைத் தெம்பைத் தருகின்றது.
1 min |
January 20, 2021
DEEPAM
அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்!
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி. ஆனால், நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை! தமிழ்த் திருநாட்டில் உள்ள இந்தத் தலத்தில் எண்ணற்ற மகான்கள் அவதரித்து மக்களை வழி நடத்தியுள்ளனர். பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலை திருத்தலம் அருணையம்பதி, சோணாசலம், அருணாசலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
1 min |
January 20, 2021
DEEPAM
மஹா பலன் தரும் தசமஹா வித்யா!
ஸ்ரீவித்தை அல்லது தசமஹா வித்தை என்பது, ஸ்ரீவித்தை, ஸ்ரீபுரம், ஸ்ரீசக்கரம், பிரம்ம வித்யா என்ற பல்வேறு பாகங்களாக இறைவனால் அருளப்பட்டது. ஸ்ரீவித்தையை கற்கவேண்டுமென்றால் தசமஹா வித்தையை கற்க வேண்டும். தசமஹா வித்தை என்பதற்கு, ‘பத்து பெரிய மந்திரங்கள்' என்று பொருள்.
1 min |
January 20, 2021
DEEPAM
வெற்றிக் கொடி கட்டு!
உலகின் தலைச்சிறந்த மகானாக, தத்துவஞானியாக உருவாகிய வேதாத்திரி மஹரிஷியின் ஆரம்பகாலங்கள் பொருள் துறை சார்ந்த சிக்கல்கள் மிகுந்ததாக இருந்தது.
1 min |
January 20, 2021
DEEPAM
தில்லையில் ஆருத்ரா திருவிழா!
தில்லையின் எல்லையை மிதித்தாலே நமது தொல்லை வினைகளை, “இல்லை' என்றாக்கும் தில்லை தலத்தில் தினந்தோறும் திருவிழாதான்!
1 min |
January 05, 2021
DEEPAM
விவசாயத்தை செழிப்பாக்கும் ஸ்ரீ பச்சைவாழியாள்!
கடலூர் மாவட்டம், காரைக்காடு திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் திருக்கோயில்.
1 min |