அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே இவை சாத்தியப்படும். இதைத் தான் நான் ஒவ்வொரு பள்ளிகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டத்திலும் கூறி வருகிறேன்’’ என்று பேச ஆரம்பித்த செங்கல்பட்டை சேர்ந்த 10 வயதான சிறுமி ப்ரசித்தி. இவ்வளவு சிறு வயதில் ஒரு லட்சம் மரங்களை நட்டு, என்னெற்ற விருதுகளையும், தமிழ்நாட்டின் சைல்ட் கிரீன் அம்பாசிடராக பட்டத்தையும் பெற்றுள்ளார். அவரின் இந்த பெரிய சாதனையின் ஆரம்பப்புள்ளி எது என்பதும், தனது இலக்கு மற்றும் இதனால் தான் அடைந்த இடத்தையும் கூறுகிறார்.
‘‘இயற்கை சார்ந்த அனைத்தும், கடல், பறவைகள், மரங்கள், தேனீக்கள், காற்று... இவங்க எல்லாம் என்னுடைய நண்பர்கள். நான் 6வது படிக்கும் போதே இந்த ப்ரசித்தி பார்ம்ஸ் ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சேன். இயற்கை கொடுத்த பெரிய ஆசான் மரம் தான். நாம் எவ்வளவு தான் ஒரு மரத்தை வெட்டினாலும், அது திரும்ப திரும்ப வளர்ந்து வரும். அதிலிருந்து நான் கற்றுக் கொண்டது தான் ‘never giveup’’ என்றவர் தன்னுடைய பயணத்தை முதன் முதலில் மரங்களில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
‘‘2016 வர்தா புயல் பற்றி எல்லாருக்கும் ரொம்ப நல்லாவே தெரியும். அந்த நேரத்தில் நடந்த இயற்கை சேதாரம் அதிகம். அதிலும் மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்திருந்தது. அதை நான் பார்த்த போது ரொம்பவே கஷ்டமா இருந்தது. சொல்லப் போனால் நான் அந்த மரங்களை பார்த்து அழுதிட்டேன். அப்போ எனக்கு 4 வயசு. அதன் பிறகு தான் புரிந்தது அழுவதால் ஏதும் நடக்காது என்று. என்ன செய்யலாம்ன்னு யோசித்த போது, மரங்களை நடலாம்ன்னு முடிவு செய்தேன். 2 வருஷம் மரங்கள் நடுவது குறித்து தெரிந்து கொள்ள ஆரம்பிச்சேன். அதாவது ஒரு மரம் நடவேண்டும் என்றால் அதன் மண் வளம் சரியாக இருக்க வேண்டும். தோட்டம் எவ்வாறு அமைக்கலாம். செடிகளுக்கு தண்ணீர் எந்த அளவு பாய்ச்சணும், விதைகள் தேர்வு செய்யும் முறை... இப்படி மரம் வளர்ப்பது குறித்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எனக்கு ஆறு வயசு இருக்கும் போது ‘ப்ரசித்தி பாரஸ்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பினை துவங்கினேன். ஆரம்பிக்கும் போது ஒரு லட்சம் மரங்களை நடவேண்டும் என்ற குறிக்கோளோடுதான் துவங்கினேன்.
Esta historia es de la edición June 01, 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 01, 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.