ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்!
Thangamangai|Thanga Mangai February 2024
மைவி 3 செயலி என்ற பெயரில் கோவையில் செயல்பட்டு வரும் நிறுவனம் தவறாக நிதி திரட்டுவதாக புகார் ஒருவர் கொடுக்கிறார். ஆனால் அந்த நிறுவனம் முதலீட்டாளர்களை அழைக்கிறார்கள். முதலீடு செய்யாதவர்களையும் தங்களுக்குப் பக்கபலமாக இருக்க பணம் கொடுத்து அழைத்திருக்கிறார்கள்.
ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்!

அரசியல் கட்சித்தலைவருக்கு இணையாக ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் மை வி 3 செயலி நிறுவனத்தின் உரிமையாளர். இதன்மூலம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே திரும்பப் பார்க்க வைத்திருக்கிறார்.

நிதி நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் புகார் கொடுத்துத் தான் பார்த்திருக்கிறோம். இங்கே நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக முதலீட்டாளர்களே திரண்டு இருக்கிறார்கள்.

‘சதுரங்க வேட்டை’ படத்தையும் மிஞ்சும் அளவுக்கு இந்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன தான் நடந்தது?

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுவதைக் கேட்போம்...

“நமக்கு பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் லட்சக்கணக்கில் போட்டிருக்கிறார்கள். நிறுவனம் மூடப்பட்டால் போட்ட பணம் அவ்வளவு தான். திரும்பக் கிடைப்பது கடினம். அந்தப் பதற்றத்தோடு தான் இந்தத் தொழிலில் இவர்கள் இறங்குகிறார்கள்.

பிரச்சனை வந்ததும் முதலீட்டாளர்களை அழைத்து ஆதரவு கேட்டுள்ளார்கள்.

ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டாம், நான் சொல்லும் இடத்துக்கு வாங்க, கர்ப்பிணிகள் வரவேண்டாம் என்று தன்மையாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பேசுவது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.

ஏதோ மாநாட்டுக்கு தலைவர் அழைப்பதைப் போல் அந்த நிறுவன உரிமையாளர் அழைக்கிறார். உங்கள் நிறுவனத்தின் மீது புகார் வந்தால், நீங்கள் தானே எதிர்கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களை ஏன் இழுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

வாடிக்கையாளர்களை அழைக்கும் போது இவர்கள் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தற்போது அந்த நிறுவனத்தின் மீது 3 வழக்குகள் போடப்பட்டுள்ளன. போகப்போக அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் செயல்பாடு ரிசர்வ் வங்கியின் சட்டத்துக்குப் புறம்பானதாகவே இருக்கிறது.

ஈமு கோழி வளர்த்தால் லாபம், தேக்கு மரம் வளர்த்தால் லாபம் என்றார்கள். இப்படி எதையாவது செய்து மக்களிடமிருந்து 10 ரூபாயாவது பறிக்க வேண்டும். உங்களிடமிருந்து பணத்தைப் பறிக்கவே இந்த ஈமு கோழி பிரச்சனையை முன்னிறுத்தி திசை திருப்புவார்கள்.

Esta historia es de la edición Thanga Mangai February 2024 de Thangamangai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición Thanga Mangai February 2024 de Thangamangai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE THANGAMANGAIVer todo
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
Thangamangai

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

time-read
1 min  |
Thanga Mangai February 2024
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
Thangamangai

வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!

வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.

time-read
2 minutos  |
Thanga Mangai February 2024
வாழ்வியலும் பொருளியலும்!
Thangamangai

வாழ்வியலும் பொருளியலும்!

மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.

time-read
2 minutos  |
Thanga Mangai February 2024
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
Thangamangai

புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?

புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?

time-read
2 minutos  |
Thanga Mangai February 2024
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
Thangamangai

காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?

சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.

time-read
2 minutos  |
Thanga Mangai February 2024
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
Thangamangai

சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!

சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.

time-read
4 minutos  |
Thanga Mangai February 2024
துளியில் நிறைந்த கடல்!
Thangamangai

துளியில் நிறைந்த கடல்!

இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.

time-read
4 minutos  |
Thanga Mangai February 2024
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
Thangamangai

விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

time-read
3 minutos  |
Thanga Mangai February 2024
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
Thangamangai

விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?

குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.

time-read
3 minutos  |
Thanga Mangai February 2024
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
Thangamangai

கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!

அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.

time-read
3 minutos  |
Thanga Mangai February 2024