பிரளயம் முடிந்து மறுபடி உலகம் தோன்றியது. எல்லா உயிர் களும் அழிந்து மறுபடியும் உலகம் தோன்றி வரும் நேரத்தில் நவகிரகங்கள் இந்த பூமியில் பிரளய வெள்ளத்தில் ஏதேனும் ஒரு இடம் அழியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்காக வந்தனர். ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வில்வ மரம் பிரளய காலத்தின் பாதிப்பிலிருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்ததைப் பார்த்து வியந்தனர். இந்த இடம் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த இடம். ஈசனின் சாந்நித்யம் (சக்தி) உள்ள இடம் என்று எண்ணிய நவகிரகங்கள், ஒவ்வொருவரும் அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினர். அப்படி நவக்கிர கங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்ட லிங்கங்களை நவகிரக லிங்கங்கள் என்று அழைத்தனர்.
சூரியலிங்கம், சந்திர லிங்கம், அங்காரகலிங்கம், புதலிங்கம், குருலிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகுலிங்கம், கேதுலிங்கம் என்று, இந்த லிங்கங்கள், வரிசையாக சிறி யதும் பெரியதுமாக, கோயில் பிராகாரத்தில் காட்சிதரும் மாட்சி, வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் இந்த லிங்கங்கள் சிவனோடு ஐக்கியமாகி விடுவதாக ஐதீகம்.
இங்கே நவக்கிரக லிங் கங்கள் என்று தனியாக இருந்தாலும், வழக்கம் போல நவகிரக மண்டபத்தில் நவகிரகங்கள் உண்டு. இப்படி அமைத்த தலம் தான் திருத்தெங்கூர் ரஜதகி ரீஸ்வரர் எனப்படும் வெள் ளிமலைநாதர் ஆலயம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆலயம் மிகப் பழமையான ஆலயமாக கருதப்படுகின்றது.
ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து, உலகம் கொள்ளப்பட்டும், இத்தலத் தில் மட்டுமே தெளிந்த நீர் தேங்கி நின்றதால் 'தேங்கூர்' என்று பெயர்பெற்றது என்பது தலபுராணச் செய்தி. தென்னை வளம் பெற்ற ஊராதலின் 'தெங்கூர்' எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர்.
இந்த தலத்தில், மூல மூர்த்தியையும், அம்பாளையும் கிரகவணங்கி, நவக் லிங்கங்களையும் வணங்குவோர்க்கு ஒன்பது கிரகங்களால் வரக் கூடிய ஜாதக தோஷங்கள் அணுகுவதில்லை. மாறாக ஒன்பது கோள்களும் தங்கள் காலத்தில் அவர்களுக்கு அருளை வாரிவாரி வழங்குகின்றன. எந்த ஒரு ஜாதகத்திலும் ஏதேனும் சில கோள்கள் நல்ல அமைப்பிலும், ஏதேனும் சில கோள்கள் தீமை தரும் அமைப்பிலும் இருப்பது நியதி.
Esta historia es de la edición December 01, 2022 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 01, 2022 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.