தமிழகத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நீடித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வருகிற 19 ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 19ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிக பட்சமாக 20 செ.மீ. வரை மழை பெய்யும். இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ‘அலர்ட்’ விடப்பட்டுள்ளது. மேலும் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ‘ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்படும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் தொடர்ச்சியாக வருகிற 19ந்தேதி வரை 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Esta historia es de la edición May 16, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 16, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குரூப் 4 தேர்வை ஆட்சியர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 தேர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது: பயணிகள் மகிழ்ச்சி
திருச்சி பன்னாட்டு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் செயல்பட துவங்கியது.
சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 தமிழக தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
தேங்காய்த் திட்டில் வாய்க்கால் சீரமைக்கும் பணியின்போது, மின்துறை சுற்றுமதில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயம அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி தொகையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
ஆபாச வீடியோ, ஆடியோ வழக்கு: தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் அதிரடி கைது
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக சாமிகள் பரமாச்சாரியா தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் பணம் கேட்டு ஆதீனத்தை மிரட்டினர்.
14 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
புதுவையில் பரபரப்பு விஷ வாயு தாக்கி 3 பெண்கள் பலி
பொதுமக்களை வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தல்
குரூப் 4 தேர்வு மையங்களை ஆட்சியர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், நடைபெறும் குரூப் 4 தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி மரணம் அடைந்தார்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவிகள்
மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது
பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.