Intentar ORO - Gratis

தத்தளிப்பில் நேபாளம்!

Dinamani Thoothukudi

|

September 15, 2025

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.

போராட்டக்காரர்களின் வன்முறையில் உச்சநீதிமன்றக் கட்டடமும் தப்பவில்லை. யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்ஆப், எக்ஸ் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்கு கடந்த செப். 4-ஆம் தேதி நேபாள அரசு தடை விதித்தது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு மேற்கூறிய செயலிகள் பதிவு செய்யப்படாததால், அவற்றைத் தடை செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கி சமூக வலைதளங்களைத் தணிக்கைக்கு உள்படுத்தவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக தகவல் பரவி அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.

அரசின் தடைக்கு எதிராக ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீருடையுடன் கடந்த 8-ஆம் தேதி வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். தலைநகர் காத்மாண்டு உள்பட பல்வேறு நகரங்களில் பெருந்திரளான இளைஞர்கள் அரசுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியும் முழக்கமிட்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். போராட்டத்துக்கு 'ஜென் இசட்' (1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள்) தலைமுறையினரின் போராட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Thoothukudi

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size