Intentar ORO - Gratis
பரந்த கடல், விரிந்த கடற்கரை...
Dinamani Thoothukudi
|June 11, 2025
சென்னை மெரீனா கடற்கரை, கடலூர் சில்வர் கடற்கரை, நாகப்பட்டினம் காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரைக்கு 'நீலக்கொடி சான்றிதழ்' பெறுவதற்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகில் நீரின் மிகப் பெரிய இயற்கை மூலமாக கடல் விளங்குகிறது. நீர் சூழ்ந்த இப்பேருலகில் ஆர்த்தெழும் கடலே மாபெரும் பரப்பை (71 சதவீதம்) கொண்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதியில் தான் (29 சதவீதம்) நிலப்பரப்பு உள்ளது. தொன்மைக்காலந்தொட்டே கப்பல் போக்குவரத்து, கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் முதலியன கடல் வழியேதான் மேற்கொள்ளப்பட்டன. கடலைச் சுற்றித் தான் அக்காலத்தில் உலகம் இயங்கி வந்துள்ளது. மனித நாகரிகம் வளர்ச்சி பெறுவதற்கு கடல் கடந்த வணிகம் ஒரு பெரும் காரணியாக இருக்கிறது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
உட்புறம் நெருப்பு குழம்பாகக் கொதித்துக் கொண்டிருக்கிற இந்தப் புவியின் மேற்பரப்பை குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்து இருக்கிறது. எனவே, அதை 'புவியின் தோல்' என்று அழைக்கின்றனர். கடற்கரை என்பது கடல் ஓரம் அமைந்துள்ள நிலப் பகுதியாகும். கடற்கரைகள் பொதுவாக மணல் அல்லது பாறைகளால் ஆனவை. கடலையொட்டி அமைந்துள்ள கடற்கரைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுற்றுலாத் தலமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் அன்றிலிருந்து இன்றுவரை விளங்கி வருகின்றன; அத்துடன் கடல், வணிகத்தை மேற்கொள்ளவும், கடலோர பகுதிகளை அரிப்பிலிருந்து காக்கவும், துறைமுகங்கள் அமைக்கவும், வணிகங்களை மேற்கொள்ளவும் பயன்படுகிறது.
தேசிய நீர்வரைவியல் அமைப்பு (நேஷனல் ஹைட்ரோகிராஃபிக் ஆர்கனைசேஷன்) மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பு, இந்தியாவின் கடற்கரை பகுதிகள் கடந்த 53 ஆண்டுகளில் 48 சதவீதம் விரிவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 1970-இல் இந்திய கடற்கரை பகுதியின் நீளம் 7,516 கி.மீ.-ஆக இருந்தது. தற்போது, இது 2023, 2024-இல் 11,098.81 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 1970-இல் பதிவு செய்யப்பட்டதைவிட நீளம் 3,582.21 கி.மீ. அதிகரித்துள்ளது.
Esta historia es de la edición June 11, 2025 de Dinamani Thoothukudi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Thoothukudi
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Thoothukudi
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Translate
Change font size

