Intentar ORO - Gratis
ஒரு மனிதன்... ஓர் இயக்கம்...
Dinamani Nagapattinam
|July 23, 2025
எனது மதம் பாரதீயம்' என்றும், என்னுடைய மதத்தின் தேவதை பாரத மாதா' என்றும், 'தீண்டாமை வெறுக்கத்தக்க பாவமாகவும், இந்திய சமூகத்துக்கே களங்கமாகவும் உள்ளது' என்றும் பிரகடனப்படுத்தியவர் சிவா.
பாலகங்காதர திலகர், விபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் ஆகிய மூவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க கால மும்மூர்த்திகள் என வரலாற்றாளர்களால் வரையறுக்கப்பட்டனர். அதேபோன்று, தமிழ் மண்ணில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி சுப்பிரமணிய பாரதி ஆகியோர் திலகர் சகாப்தத்தின் மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக விளங்கினர்.
இன்று வீரமுரசு சுப்பிரமணிய சிவா மறைந்த நூற்றாண்டு நிறைவு நாள். அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டம், வத்தலகுண்டில் 1884-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி பிறந்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தான் அமைத்திருந்த பாரதாஸ்ரமத்தில் 1925-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி மறைந்தார் சிவா. அப்போது, அவருக்கு வயது 41.
1900-ஆம் ஆண்டு கோவையில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பதினாறு வயது. திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்டது. மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை.
1902-இல் இருந்து சில காலம் திருவனந்தபுரத்தில் இருந்தார். இவர் ஒரு சராசரி இளைஞராக விளங்கவில்லை. எந்நேரமும் இவரைச் சுற்றி பத்து இளைஞர்கள் இருந்து கொண்டே இருப்பர்.
1906-இல் சிவா ஆர்ய சமாஜ தொண்டர் தாகூர்கான் சந்திரவர்மா என்பவரின் சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். அவரிடம் இயல்பாகவே அமைந்த அரசியல் உணர்வை தாகூர்கான் உரை தூண்டிவிட்டது.
வங்கப் பிரிவினை, ஆங்கிலேயர் சூழ்ச்சி, சுதேசி இயக்க வளர்ச்சி, காங்கிரஸின் சுயராஜ்ய தீர்மானம், நாவலர் விபின் சந்திர பாலரின் கனல் தெறிக்கும் உரைகள், லாலா லஜபதி ராய்-அஜீத் சிங் நாடு கடத்தல் ஆகிய அரசியல் நிகழ்வுகள் சிவாவின் சிந்தனையில் பெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின.
ஆன்மிகமும் அரசியலும் இரண்டறக் கலந்த தீவிரச் செயல்பாட்டில் நாட்டமும், ஈடுபாடும்மிக்க வித்தியாசமான இளைஞராக வளர்ந்தார் சிவா.
'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற இளைஞர் அமைப்பை திருவனந்தபுரத்தில் நிறுவினார். இளைஞர்கள் பலரை இவ்வமைப்பில் இணைத்து அவர்களுக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்தும் சிறப்புப் பயிற்சிகள் அளித்தார்.
Esta historia es de la edición July 23, 2025 de Dinamani Nagapattinam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
3 mins
November 03, 2025
Dinamani Nagapattinam
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Nagapattinam
வாரிசுகளின் கடமை
அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
2 mins
November 03, 2025
Dinamani Nagapattinam
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Translate
Change font size
