Intentar ORO - Gratis
மீன் வள மேலாண்மை அவசியம்!
Dinamani Nagapattinam
|July 11, 2025
கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல்கள் வரை தீரக நீர்ப்பரப்பு (கரையை ஒட்டிய கடல் நீர் பரப்பு) என்றும், அதற்கு அப்பால் 12 முதல் 200 நாட்டிக்கல் மைல்கள் வரையிலான பகுதி பிரத்யேக பொருளாதார மண்டலம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் பரப்பளவு சுமார் 20.2 லட்சம் சதுர கி.மீ. ஆகும். நமது நாடு ஆண்டுக்கு சுமார் 25 முதல் 28 லட்சம் மெட்ரிக் டன் மீன்களை உற்பத்தி செய்கிறது. இதில் 60 சதவீத மீன்கள் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதையும், அவற்றை வேட்டையாடுவதையும் தடுக்கும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், மீன்பிடித்தலை வரைமுறைப்படுத்தும் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம், கடற்கரைப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், தொழில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிக்கை, கடல் மாசுபாட்டைத் தடுக்கக் கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், மீன்பிடி கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கக்கூடிய இந்திய மீன்பிடி சட்டம், கடல் உயிரின மரபணு வளங்களைப் பாதுகாக்க உயிரியல் பல்வகைமைச் சட்டம் மற்றும் கடல் நீர் பரப்பு பற்றிய சூழலியல் விதிகளைக் கொண்டுள்ள ஐ.நா. சபையின் கடல் சட்ட சாசனம் போன்றவை இந்தியாவில் நடைமுறையில் உள்ளன.
அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியல் பிரிவு 21இன் படி தீரக நீர்ப்பரப்பு எல்லைக்குள் மீன்பிடி தொழில் கண்காணிக்கப்படுகிறது.
1979-ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மாதிரி மசோதாவின் அடிப்படையிலில் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தீரக நீர்ப்பரப்பு கடல் எல்லைக்குள் உள்ள மீன்வளத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை இயற்றியுள்ளன.
Esta historia es de la edición July 11, 2025 de Dinamani Nagapattinam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Translate
Change font size
