Intentar ORO - Gratis

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?

Dinamani Dharmapuri

|

April 24, 2025

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.

சென்னை, ஏப். 23:

7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான கட்டணங்கள் குறித்து, சட்டப்பேரவையில் புதன்கிழமை கவன ஈர்ப்பு அறிவிப்பு கொண்டு வரப்பட்டது. இதன் மீது, விசிக உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தி.வேல்முருகன் ஆகியோர் பேசினர்.

அப்போது நடந்த விவாதம்:

எஸ்.எஸ்.பாலாஜி: 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் எப்படி அரசின் சார்பிலான குழுவிடம்புகார்களை அளிப்பார்கள்? நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனக் கூறி தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. அந்தப் பல்கலைக்கழகங்களையும் அரசின் கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும்.

சி.விஜயபாஸ்கர்: 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கான அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில கல்லூரிகளில் அடிப்படைப் பொருள்களை பணம் கொடுத்து மாணவர்களே வாங்கிக் கொள்ள வேண்டுமெனக் கூறுகிறார்கள். அதன்பிறகு, அதற்கான பணத்தை தருகிறார்கள். எனவே, அது போன்ற நிலைகளைத் தவிர்க்க வேண்டும். பயிற்சி பெறும்போது, மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய மாதாந்திர தொகையை சில சுயநிதிக் கல்லூரிகள் தருவதில்லை.

தி.வேல்முருகன்: சுயநிதிக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பெற்றுக் கொள்வதில்லை. அதிகமான கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Dharmapuri

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரதமர் குறிப்பிட்டது திமுகவைதான்; தமிழக மக்களை அல்ல: பாஜக

'பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டது திமுகவைதான்' தமிழக மக்களை அல்ல' என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size