Intentar ORO - Gratis
'நீட்' விவகாரம்: மக்களவை முடங்கியது
Dinamani Chennai
|June 29, 2024
‘நீட்’ தோ்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) கடும் அமளியில் ஈடுபட்டன.
-
இதன் காரணமாக, மக்களவை அலுவல்கள் முடங்கின. மாநிலங்களவையில் அமளிக்குப் பின்னா் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாா்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் மாணவா்களின் போராட்டம் நீடிக்கும் நிலையில், மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.
போட்டித் தோ்வு சா்ச்சைக்கு இடையே, 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ‘வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் குறித்து நோ்மையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை ‘நீட்’ விவகாரத்தை எழுப்பி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
மக்களவையில்...: மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், முன்னாள் அவைத் தலைவா் மனோகா் ஜோஷி உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினா்கள் 13 பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, ‘நீட்’ விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரும் தீா்மானத்தை ஏற்க வேண்டுமென எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசுகையில், ‘நீட் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முக்கியமானது. இந்த விவகாரத்துக்கு முன்னுரிமை அளித்து, அவையில் விவாதிக்க வேண்டுமென எதிா்பாா்க்கிறோம். எனவே, ஒத்திவைப்புத் தீா்மானத்தை அவைத் தலைவா் ஏற்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
ஆனால், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருப்பதால், ஒத்திவைப்புத் தீா்மானத்தை ஏற்க முடியாது என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா மறுப்பு தெரிவித்தாா்.
Esta historia es de la edición June 29, 2024 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு
1 min
December 02, 2025
Dinamani Chennai
அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நாட்டை விட்டு வெளியேறுங்கள்
வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'
1 min
December 02, 2025
Translate
Change font size

