மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாள்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தில்லி திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா்.
தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.
ஆம் ஆத்மியின் முன்னணி தலைவரான கேஜரிவால் இல்லாமல் அக்கட்சியின் பிரசாரம் களையிழந்து காணப்பட்டது. இந்தச் சூழலில், 50 நாள்களுக்கு பின் சிறையில் இருந்து அவா் வெளியே வந்திருப்பது ஆம் ஆத்மியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலால் வழக்கில் கைது: தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை (மதுபானக் கொள்கை) வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத் துறை, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை (55) கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. பின்னா், திகாா் சிறையில் அடைக்கப்பட்ட கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. தில்லி நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின்படி, அவருக்கு மே 20-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.
Esta historia es de la edición May 11, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 11, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்
காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை
தைவானின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு ‘தண்டனை’யாக அந்தத் தீவைச் சுற்றி போா் ஒத்திகையைத் தொடங்கியதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது.
ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க...
40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா
காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்லப் போராடி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா விமா்சித்தாா்.
தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்
தீவிர மதவாதம், ஜாதியம் மற்றும் குடும்ப அரசியலைத் தன்னுள் கொண்டது ‘இந்தியா’ கூட்டணி என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் பத்து நாள்களில் எண்ணப்படவுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்துக்கு தலைவர்கள் கண்டனம்
முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய தடுப்பணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா
சென்னை அருகே கைப்பேசி ஆலை அமைக்கிறது கூகுள்
சென்னை அருகே ‘பிக்சல்’ கைப்பேசி ஆலையை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை கூகுள் விரைவில் நடத்தவுள்ளது.