ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு
Dinamani Chennai|May 03, 2024
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு

'இந்தியாவில் பலவீனமான அரசு அமைவதே பாகிஸ்தானின் விருப்பம். அதற்காக ராகுல் காந்தி அடுத்த பிரதமராக அந்த நாடு ஆதரவு தெரிவிக்கிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

பாகிஸ்தானின் 'சீடர்' காங்கிரஸ் என்றும் அவர் விமர்சித்தார்.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சௌதரி ஃபவாத் ஹுசைன், தனது சமூக ஊடகபக்கத்தில் புதன்கிழமை ராகுல் காந்தியின் விடியோ ஒன்றை பகிர்ந்து, அவரை புகழ்ந்து பதிவிட்டார். இந்தச் சூழலில், மேற் கண்ட குற்றச்சாட்டை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.

மக்களவைத்தேர்தலையொட்டி, குஜராத்தின் ஆனந்த் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அழிந்து வருவதால், பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. அக்கட்சிக்காக, பாகிஸ்தான் தலைவர்கள் இப்போது பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.

முழுமையாக காங்கிரஸின் 'இளவரசர்’ (ராகுல்) இந்திய பிரதமராக வேண்டுமென்பதே பாகிஸ்தானின் விருப்பம். காங்கிரஸ் கட்சி அந்நாட்டின் 'சீடர்' என்பதால், இதில் வியக்க எதுவுமில்லை.

பாகிஸ்தானுக்கும் காங்கிரஸுக்கும் உள்ள தொடர்பு, இப்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் பலவீனமான அரசு அமைய வேண்டுமென நமது எதிரிகள் விரும்புகின்றனர்.

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டில் மிகப்பெரிய பயங்கர வாதத் தாக்குதல் நடந்தபோது, நாட்டில் பலவீனமான அரசுதான் இருந்தது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போல் ஊழல் வேண்டுமென்பதும் அரசு அமைய அவர்களின் விருப்பம்.

ஆனால், மோடியின் அரசு வலுவானது; யாருக்கும் அடிபணியாதது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைப் போல் இல்லாமல், இப்போது பாகிஸ்தானின் பயங்கரவாத 'பயணம் ஒடுக்கப்பட்டுள்ளது.

முன்பு பயங்கரவாதத்தை ஏற்று மதி செய்த அந்த நாடு, இப்போது கோதுமை இறக்குமதி செய்யவே போராடுகிறது.

அதேநேரம், உலகின் நம்பிக்கை ஒளி இந்தியா என்று சர்வதேச சமூகத்தினர் கூறுகின்றனர். ஒட்டு மொத்த உலகின் நண்பனாக இந்தியா பார்க்கப்படுகிறது என்றார் பிரதமர் மோடி.

Esta historia es de la edición May 03, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición May 03, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
போராட்ட வன்முறை: பிரான்ஸ் பிரதேசத்தில் அவசரநிலை
Dinamani Chennai

போராட்ட வன்முறை: பிரான்ஸ் பிரதேசத்தில் அவசரநிலை

தோ்தல் சீா்திருத்தங்களை எதிா்த்து பிரான்ஸின் நியூ காலடோனியா பிரதேசத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்ததால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் வியாழக்கிழமை மோதவிருந்த 66-ஆவது ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

time-read
1 min  |
May 17, 2024
காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை
Dinamani Chennai

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிச்சுற்று வீரா் மெய்ராபா லுவாங் மாய்ஸ்னம் காலிறுதிக்கு முன்னேறி அசத்தி வருகிறாா்.

time-read
1 min  |
May 17, 2024
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவராக கபில் சிபல் தேர்வு
Dinamani Chennai

உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவராக கபில் சிபல் தேர்வு

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

நல்லவே எண்ணல் வேண்டும்

நாம் ஒருவரை ஒருவா், ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தும்போது நம்மிடையே இணக்கமான சூழல் நிலவுகிறது. வாழ்த்து எண்ண அலை இருவருக்கிடையே மோதி, பிரதிபலித்து நல்விளைவை ஏற்படுத்துகிறது.

time-read
2 minutos  |
May 17, 2024
Dinamani Chennai

போதைப் பொருள்கள் விவகாரம் உயர் நிலையிலான ரகசிய குழு: அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தமிழக முதன்மைச் செயலா், உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் இணைந்து உயா் நிலையிலான ரகசிய குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

பருவநிலை மாற்றம்: நோய் பரவலை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை

பருவநிலை மாற்றத்தால் பரவும் நோய்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு
Dinamani Chennai

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினம், மே 16: நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே மே 17-இல் தொடங்குவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா
Dinamani Chennai

கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ‘நான் முதல்வன்’ கல்லூரிக் கனவுத் திட்டம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
May 17, 2024
சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி
Dinamani Chennai

சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் வியாழக்கிழமை காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

time-read
1 min  |
May 17, 2024