இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஸாவில் சண்டையை நிறுத்துவதற்காக இஸ்ரேலுக்கும், ஹமாஸýக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை மிக மிக நெருக்கத்தில் உள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், வரும் திங்கள்கிழமை (மார்ச் 4) போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று நம்புகிறேன்.
அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், புனித ரமலான் மாதத்தில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. இதன் மூலம், ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களில் மேலும் பலரை விடுவிப்பதற்கான அவகாசம் கிடைக்கும் என்றார் ஜோ பைடன்.
இதற்கிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக பிரான்ஸ் தயாரித்துள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர்தான் அதனை தற்போது பரிசீலித்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி "ராய்ட்டர்ஸ்' நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியது.
Esta historia es de la edición February 28, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 28, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!
\"ஹிஸ்புல்லாக்கள் இங்கே நெருப்பு வைக்கிறார்கள். லெபனானில் உள்ள அவர்களது நிலைகளும் அதே போல் தீக்கிரையாக்கப்பட வேண்டும்.
இந்தியாவுக்கு முதல் வெற்றி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தை புதன்கிழமை வென்றது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
'இந்தியா' கூட்டணியின் வெற்றி-சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்
‘இந்தியா’ கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சா்வாதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
யூ டியூபர் டி.டி.எப். வாசனின் கைப்பேசி, ஆவணங்கள் போலீஸாரிடம் ஒப்படைப்பு
மதுரையில் கைப்பேசியில் பேசியபடி காரை அபாயகரமாக ஓட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் உள்ள யூ டியூபா் டி.டி.எப்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு வெற்றி: திமுக கூட்டணி உற்சாகம்
தமிழக மக்களவைத் தோ்தல் களத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பதிவு செய்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்
தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்; அடுத்த வெற்றிக்குத் தயாராகுவோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.
விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்பாளா்கள், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல் புகாா்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை
இலங்கையிலிருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்தனா்.