சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், சா்வதேச மகளிா் திருவிழா சென்னை எத்திராஜ் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், இலக்கியம், சமூகப் பணிகளில் சிறப்பாக சேவையாற்றி வரும் ஆா்.கமலம் சின்னசாமிக்கு ஔவையாா் விருதையும், சேலத்தைச் சோ்ந்த ம.இளம்பிறைக்கு பெண் குழந்தை விருதையும் வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டை பொறுத்தவரை சங்ககாலம் முதலே பெண்கள் உயா்வாக போற்றப்பட்டு வருகின்றனா். பெண்பால் புலவா்கள் மிகுதியாக செய்யுள் இயற்றியுள்ளனா்.
மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. இடையே ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால் பெண்கள் முடக்கப்பட்டனா்; அடக்கப்பட்டனா். இதிலிருந்து பெண்களைவிடுவிக்க ஒரு இயக்கம் தேவைப்பட்டது; அதுதான் திராவிட இயக்கம். அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்ணினத்துக்கும் அது அறைகூவல் விடுத்தது. பெண்களை தன்னம்பிக்கை கொண்டவா்களாக, துணிச்சல்மிக்கவா்களாக ஆக்கியது திராவிட இயக்கம்தான்.
நிமிா்ந்த நன்னடை, நோ்கொண்ட பாா்வை, திமிா்ந்த ஞானச் செருக்குக்கு பெயா் பெற்றிருக்கக் கூடிய சிங்கங்களாக பெண்கள் இன்று இருப்பதை பாா்க்கும் போது, பெண்ணுரிமைப் போராட்டங்களால் விளைந்த பயன்கண்கூடாகத் தெரிகிறது.
Esta historia es de la edición March 09, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 09, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் வழக்கு: பிபவ் குமாருக்கு 5 நாள் போலீஸ் காவல்
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது.
பாஜக தலைமையகத்தை நோக்கி பேரணி: கேஜரிவால் தடுத்து நிறுத்தம்
தில்லியில் பாஜக தலைமையகத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினருடன் பேரணியாகச் செல்ல முயன்ற கட்சியின் தேசிய அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து - ஈரான் அதிபரின் நிலை என்ன?
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி பயணம் செய்த ஹெலி காப்டர் மோசமான வானிலை காரணமாக வனப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் குறையும் வெப்பம்!
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல இடங்களில் மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது.
4 மாவட்டங்களுக்கு நாளை வரை சிவப்பு எச்சரிக்கை
தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (மே 20,21) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
நேபாள பிரதமா் பிரசண்டா தலைமையிலான அரசு மீது திங்கள்கிழமை (மே 20) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்தியாவுடன் வர்த்தக உறவு பாதிப்பு ஏன்?
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதால் அந்நாட்டுடன் வா்த்தக உறவு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இசாக் தாா் நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் விளக்கமளித்துள்ளாா்.
பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் போட்டியின் 69-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
அரசியல் கட்சிகளை ஆதரித்து வாக்கு சேகரிக்க மாட்டோம்
மம்தா குற்றச்சாட்டுக்கு துறவிகள் பதில்
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் களம்: நீதி கோரி வாக்கு கோரும் பண்டிட் வேட்பாளர்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜௌரி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒரே வேட்பாளரான திலீப்குமார் பண்டிதா (56) தங்கள் சமூகத்துக்கு நீதி கோரி வாக்கு சேகரித்து வருகிறார்.