புது தில்லி, நவ. 27: முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை ஏற்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு; சர்வதேச நலனை முன்னிறுத்தி இந்தியா செயல்படும்' என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் வசிக்கின்றனர். நான்கில் மூன்று பங்கு வர்த்தகம் அந்த நாடுகளிலேயே நடைபெறுகிறது.
உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 85 சதவீத பங்களிப்பை ஜி20 நாடுகளே வழங்கி வருகின்றன. அத்தகைய வலிமைமிக்க கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து இந்தியா ஏற்கவுள்ளது.
இது இந்தியாவுக்கும் இந்தியர்களுக்குமான மிகப் பெரிய வாய்ப்பு. இந்தியா 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடியுள்ள நிலையில் ஜி20 தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மேலும் சிறப்புக்குரியது. சர்வதேச நலனையும் உலக மக்களின் நலனையும் மையப்படுத்தி ஜி20 கூட்டமைப்பை இந்தியா வழி நடத்தும்.
சுற்றுச்சூழல், நீடித்த வளர்ச்சி, பருவநிலை மாற்றம், அமைதி உள்ளிட்ட பல்வேறு சவால்களை உலகம் தற்போது சந்தித்து வருகிறது. அந்த சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று இந்தியா செயல்படும். அனைவருக்குமான நலன், அனைவருக்குமான அமைதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தியா செயல்படும்.
Esta historia es de la edición November 28, 2022 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 28, 2022 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
ராகுல் காந்தி
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்
17 இடங்களில் சதமடித்தது வெயில்
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
அமைச்சரவை ஒப்புதல்
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்
இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.