இரவு தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து என இந்த எலெக்ட்ரானிக்ஸ் யுகத்தில் நம் வாழ்க்கைமுறையே தலைகீழாக மாறிப்போய் உள்ளது. கணிப்பொறியில் வேலைசெய்பவர்கள் சராசரியாக ஒரு நாளில் பாதிக்கு மேற்பட்ட நேரத்தை கணிப்பொறி திரையை வெறிப்பதிலேயே செலவழிக்கிறார்கள். இப்படி ஓயாது கண்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது நல்லதா என்றால் நல்லது இல்லை என்கிறார்கள் கண் மருத்துவர்கள். ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் எலெக்ட்ரானிக் ஒளிர்திரைகளையே நோக்கிக்கொண்டிருப்பதால் கண்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதை, கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (Computer Vision Syndrome - CVS) என்கிறார்கள்.
கண்கள் ஏன் பாதிக்கின்றன?
நம் கண்கள் லட்சக்கணக்கான வருடங்களாக இயற்கையான ஒளியைப் பார்த்துப் பார்த்து பரிணாமம் அடைந்தவை. அது போன்ற ஒளிக்கும் காட்சிகளுக்கும் மட்டுமே இயல்பாகப் பழக்கப்பட்டவை. பொதுவாக, அதிக ஒளி உமிழும் காட்சிகளைப் பார்க்கும்போது நம் கண்கள் கூசும். மேலும், எந்த ஒரு பொருளைக் கூர்ந்து நோக்கும்போதும் நம் கண்ணின் மணிகள் விரிவடையும். கேமரா லென்ஸ் ஒன்று ஜூம் ஆவதைப் போன்றதுதான் இது. இப்படி ஜூம் ஆகும் கண்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். டி.வி., கம்ப்யூட்டர் திரைகளைப் பார்க்கும்போது வெகுநேரம் கண்கள் ஜூம் ஆன நிலையிலேயே இருக்க நேர்கிறது. இதனால், கண்ணின் சுருங்கிவிரியும் தன்மை பாதிக்கப்படுகிறது.
மேலும், சராசரியாக நமது இமைகள் ஒரு நிமிடத்துக்கு 15-20 முறை சிமிட்டும் இயல்பு உடையவை. கண் சிமிட்டுதல் ஒரு அனிச்சை செயல்பாடு. கண்ணில் உள்ள ஈரப்பதம் சீராக இருப்பதற்காகவும் கண்களைக் காப்பதற்காகவும் இயற்கை செய்திருக்கும் அழகான ஏற்பாடு கண் சிமிட்டல். கம்ப்யூட்டர் திரைகளை அதிக நேரம் நோக்கும்போது இமைகளைச் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. இதனாலும் கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
என்னென்ன பாதிப்புகள்?
Esta historia es de la edición September 01, 2023 de Kungumam Doctor.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 01, 2023 de Kungumam Doctor.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டம், பூப்பெய்தும் வரை. அடுத்தது, குழந்தைப்பேறு அடையும் பருவம்.
எளிய மருத்துவம்!
வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.
பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்
சில வாரங்களுக்கு முன், நன்றாக படித்த, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண், தன் மகனைக் கொலை செய்து விட்டார் என்று செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது.
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
உலர்திராட்சையின் நன்மைகள்!
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.
சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!
வலி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.
இரைப்பை புற்றுநோய் அறிவோம்!
ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் வகிப்பது கீரைகள்.
சுத்திகரிப்பின் சூட்சுமம்
கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.
கழுத்து வலி காணாமல் போக...
மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.