Try GOLD - Free
ஒரு நிலையற்ற அமைதி!
Dinamani Tiruppur
|May 24, 2025
பயங்கரவாதிகளுக்கு நிதி அளிக்க, சர்வதேச நிதியுதவியைப் பயன்படுத்த பாகிஸ்தான் காட்டும் முனைப்பை உலக சமுதாயம் அலட்சியப்படுத்த முடியாது. பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை உலக சமுதாயம் கட்டுப்படுத்த வேண்டும், மேலும், எந்தவொரு நிதியும் பயங்கரவாத செயலுக்காக திருப்பி விடப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
-
ரே நேரத்தில் சண்டை நிறுத்த அறிவிப்பும் நமது ஆயுதப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையும் தொடருவது அவசியமாகிறது, ஏனெனில் பொய்த்துப்போன உத்தரவாதங்களை அள்ளிவீசும் வரலாற்றுபூர்வ பின்னணியைக் கொண்ட நாடு பாகிஸ்தான். உள்நாட்டிலேயே பயங்கரவாதத்தை அந்நாடு வளர்த்தெடுப்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை.
பாகிஸ்தானே ஐசி-814 விமான கடத்தலை ஏற்பாடு செய்தது, மும்பை 26/11 தாக்குதல்களுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது, உலகின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனுக்கு அதன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து குறைவான தொலைவில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியது, டேனியல் பேர்ல் என்ற வெளிநாட்டு செய்தியாளரைக் கொன்ற கொலையாளிகளைப் பராமரித்தது என இந்தப் பட்டியல் முடிவின்றி நீள்கிறது.
தமது நாடு பயங்கரவாத தளங்களை இயக்குவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் ஒப்புக்கொண்டார். அந்த நாட்டின் விமானப்படை துணைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் '2019' புல்வாமா தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். அதை பாகிஸ்தானின் தந்திரோபாய புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என அவர் கூறினார்.
நமது ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', பாகிஸ்தானின் பயங்கரவாத வரலாறுக்கும் பஹல் காம் பயங்கரவாதத் தாக்குதல்களின்போது நடந்த கொடூரப் படுகொலைகளுக்கும் ஒரு துல்லியமான, பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் ஈடுகொடுக்கப்பட்ட பதிலடியாக இருந்தது. இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாதத் தளங்களை அழித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத்தின் சட்ட விரோத வன்முறை செயல்பாடுகளுக்குப் பிறகு, அதன் ராணுவ இலக்குகளைத் தாக்கியதுடன் அந்நாட்டின் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் நிலையங்களை வெற்றிகரமாக அழித்தன.
இரு தரப்பு சண்டை நிறுத்த முடிவு மிகவும் வியப்பான முறையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் அவரது அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளரால் அதேபோன்ற அறிவிப்பு வெளியானது. இருவரும் காஷ்மீர் குறித்த தேவையற்ற மேற்கோள்களைக் குறிப்பிட்டு, நடுநிலை தளத்தில் மத்தியஸ்தத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதில் முக்கியமாக, அரசு ஆதரவு பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக குறிப்பிடுவதை அவர்கள் தவிர்த்தனர்.
This story is from the May 24, 2025 edition of Dinamani Tiruppur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruppur
Dinamani Tiruppur
குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.
1 mins
November 02, 2025
Dinamani Tiruppur
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Tiruppur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruppur
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruppur
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruppur
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Dinamani Tiruppur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tiruppur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tiruppur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruppur
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Translate
Change font size
