Try GOLD - Free
செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
Dinamani Tirunelveli
|March 11, 2025
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதனைக் கொண்டு திறமையானவர்கள் இயந்திரத்தனமான வேலைச் சுமையை சர்வ சாதாரணமாகச் செய்து முடிக்கிறார்கள். ஆண்டுக் கணக்கில் நடந்த வேலைகள் எல்லாம் நிமிஷக் கணக்கில் முடிகின்றன.
மிக அதிக அளவிலான தகவல் தொகுப்புகளை அவற்றைப் பற்றிய துல்லிய விவரங்களைச் சேர்த்து கணினியில் ஒரே திரையில் செயற்கை நுண்ணறிவு தருகிறது. இதுபோன்று பல பிரம்மாண்டமான செயல்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களைப் பல வகையில் ஏமாற்றுவதற்கும் பயன்படுகிறது. நிதியமைச்சர் பேசாததை அவரே பேசுவது போல் மிகத் தெளிவாக செயற்கை நுண்ணறிவு மூலம் காட்ட முடிகிறது.
செயற்கை நுண்ணறிவு என்பது அலாவுதீனின் கையில் உள்ள விளக்கு போல. விளக்கைத் தேய்த்ததும் இட்ட வேலைகளைச் செய்ய பூதம் தோன்றுவதுபோல் செயற்கை நுண்ணறிவு மனிதன் முன்னே வந்து நிற்கிறது. விளக்கைத் தேய்த்துப் பூதத்திடமிருந்து யாருக்கு நன்கு வேலை வாங்கத் தெரியுமோ, அவர்களுக்கு அது வரப்பிரசாதம். பூதத்தைக் கையாளத் தெரியாவிட்டால், அது மனிதனின் கையாலாகாத தனத்தைத் தானே காட்டுகிறது?
செயற்கை நுண்ணறிவு எப்படிச் செயல்படுகிறது என்பதை மாணவர்கள் சிறுவயதிலேயே கற்பது நல்லது. ஆனால் பல மாணவர்கள் சொந்த அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளாமல் செயற்கை அறிவை நம்பி, சுயமான தங்களது திறமைகளை, கற்பனைகளை, சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளாத வெற்று மனிதர்களாகப் போய்விடுகிறார்கள். இது கொடுமையானது.
ஒரு கட்டுரை அல்லது கடிதம் அல்லது பவர் பாயிண்ட் பிரசென்டேஷனைத் தானாகச் செய்யாமல் சாட் ஜிபிடி பின்னே ஓடுகிறார்கள். அசல் சிந்தனைகள் இல்லாத வெறும் தகவல் அறிவு கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். விரைவிலேயே அவர்கள் தொழில்நுட்பம் தரும் சொகுசுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அசல் சிந்தனை இருந்தால்தான் மனிதன் சரியான தகுதியிலும் தரத்திலும் வளர்வான்.
This story is from the March 11, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Tirunelveli
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tirunelveli
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Tirunelveli
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Tirunelveli
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Translate
Change font size
