Try GOLD - Free

இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா?

Dinamani Tiruchy

|

September 09, 2025

பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்த சூதாட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளர்கள், நடிப்பவர்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

- டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா

இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம், சூதாட்டம் என்னும் கேடால் வரும் துன்பங்களை மையமாகக் கொண்டது மட்டுமல்ல; அதில் வரும் உபகதையான நளன் சரித்திரம் சூதாட்டத்தால் நளச் சக்கரவர்த்தியின் குடும்பம் அடைந்த இன்னல்களை விவரிக்கிறது.

திருக்குறள் பொருட்பால் அதிகாரம் 94-க்கு 'சூது' என தலைப்பிட்டு சூதாட்டம் தரும் இன்னல்களைப் பற்றி திருவள்ளுவர் விளக்குகிறார். சூதில் பெறும் வெற்றி, தூண்டில் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியதைப் போன்றதாகும் என்று எச்சரிக்கிறார். வெற்றி பெறுவது ஆயினும், சூதாட்ட களத்துக்குப் போகக் கூடாது என வள்ளுவர் அபாய சங்கை ஊதுகிறார்.

1968-1971-ஆண்டுகளில் சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி மாணவனாக நான் இருந்தபோது, மாணவர் சமுதாயப் பணி அமைப்பின் மூலமாக கிண்டி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை குதிரைப் பந்தயம் நடக்கும் நாள்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளைப் பிடிக்கும் பணியில் நான் சந்தித்த அனுபவங்கள் என்னைத் திடுக்கிட வைத்தன.

'ஜாக்பாட்' டிக்கெட் வாங்க, ஆயிரக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பயணி, ஐந்து ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சார ரயிலில் பயணிப்பதற்கான பயணச் சீட்டை வாங்கியிருக்கமாட்டார். பிடித்து அபராதம் போட்டால், தன்னுடைய ஜாக்பாட் காம்பினேஷனுக்கு பணம் குறைகிறது என வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு குற்ற உணர்வு இல்லாமல் விட்டுவிடும்படி கெஞ்சுவார்.

ஓடும் குதிரையின் மூலமாக தனியார் முதலாளிக்கு போகும் பணம், ஓடும் ரயில் மூலமாக நாட்டுக்குப் போகட்டும்; இரண்டும் ஓடத்தான் செய்கின்றன எனக் கறாராகச் சொல்லி அபராதம் வசூலிப்பேன். காலையில் உற்சாகமாக சென்றவர்கள், பந்தயத்தில் பணத்தை இழந்து, குதிரையையும், குதிரை ஓட்டுபவனையும் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு வருவதும், சூது குறித்து காலம் எனக்குக் கற்பித்த பாடம்.

சரித்திரம் என்பது திரும்பத் திரும்ப வரும் ஒரே விஷயம் என்பார்கள். தாயக்கட்டையாக உருவான சூது, சீட்டு கட்டு வழியாக குதிரைப் பந்தயமாக உருமாறி, அரசே நடத்தும் லாட்டரி சீட்டாக நிறம் மாறி, இன்றைய நவீன யுகத்தில் இணையவழி சூதாட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruchy

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruchy

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruchy

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruchy

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruchy

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size