Try GOLD - Free

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

Dinamani Thoothukudi

|

September 13, 2025

காவல் அதிகாரிகள், நீதித் துறை நடுவர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலுவையிலுள்ள அழைப்பாணைகள், பிடிஆணைகள், நீதிமன்றங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகைகள் போன்றவை குறித்து விவாதித்து, நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

- பெ.கண்ணப்பன்

தமிழ்நாடு காவல் துறையின் அடுத்த தலைமை இயக்குநர் யார்? என்பது தொடர்பான விவாதங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த சூழலில், காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வதற்குப் பதிலாக, பொறுப்பு தலைமை இயக்குநரை தமிழ்நாடு அரசு சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்துள்ளது.

இந்திய மாநிலங்கள் பலவற்றிலுள்ள காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வதில் கடந்த காலத்தில் நிலவிவந்த குளறுபடிகளைக் களைந்து, தலைமை இயக்குநர் நியமனம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.

காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிவிட்டு, பொறுப்பு தலைமை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அரசு வெளியிடவில்லை. இருப்பினும், இதன் பின்னணியில் உள்ள அரசியலை காவல் துறையினர் மட்டுமன்றி பொதுமக்களும் உணர்கின்றனர்.

காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை சில வடமாநிலங்கள் பின்பற்றாமல், தமிழ்நாடு காவல் துறைக்கு பொறுப்பு தலைமை இயக்குநர் நியமனம் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதை நியாயப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.

காவல் துறை நிர்வாகம் என்பது இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால், காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா? என்ற ஐயம் பொதுவெளியில் எழுகிறது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி மாநில காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனமானது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டுதான் செய்யப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு பின்பற்றாமல், பொறுப்பு தலைமை இயக்குநரை நியமனம் செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்ற காரணத்தால், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Thoothukudi

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size