Try GOLD - Free

சட்டங்கள், ஆட்சிகள் யாருக்காக?

Dinamani Thoothukudi

|

July 24, 2025

எந்த நாட்டில் மக்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கு போதுமான கூலியோடு நிறைவடைகிறார்களோ, அந்த நாடே உலகப் பெருமுதலாளிகளின் நாடு! தொழிலாளர்களைச் செக்கிழுக்கும் மாடுகளுக்கு நிகராக நடத்துவார்கள்! உயிர் வாழப் போதுமான சோறு! குறைந்த நேர ஓய்வு! அவ்வளவுதான்!

- பழ.கருப்பையா

இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருக்கிறது; பணவீக்கம் கீழ்நிலையில்; ரூபாயின் மதிப்பு நிலையாய் இருக்கிறது என நம்முடைய நிதியமைச்சர் நிர்மலா கையை உயர்த்திப் பேசலாம்! நிர்மலா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்றும் தெளிவாகவும் சரளமாகவும் பேசக் கூடிய முதல் பெண் நிதியமைச்சர். அதிகமான நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்த பெருமைக்குரியவர்.

தமிழர்களான நிர்மலா அம்மையாரும், செய்சங்கரும் வேறு மாநிலங்களிலிருந்து தான் வண்டி ஏறித் தில்லிக்கு செல்கிறார்கள்! நிர்மலா அம்மையாரின் காலத்தில் பொருளாதார வளர்ச்சி நிலை வரிசையில் உலக அளவில் பதினொன்றாவது இடத்திலிருந்த இந்தியா, பல நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்றால் அது வியத்தகு வளர்ச்சிதானே! அது இந்த ஆண்டு சப்பானைப் பின்னுக்கு உட்காரச் சொல்லி, நான்காம் இடத்திற்கு முந்திக் கொண்டிருக்கிறது!

தமிழ்நாடு சுழிநிலையிலிருந்து ஒன்பது விழுக்காட்டு வளர்ச்சியையும், தன் நான்கு ஆண்டு கால ஆட்சியிலேயே பெற்று விட்டது என்பதுபோல முதல்வர் இசுடாலின் பேசும்போது, உலக அரங்கில் இந்தியா நான்காவது இடத்திற்கு வந்தது தன்னால்தான் என்று நிர்மலா அம்மையார் பேசக் கூடாதா?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் விளையாட்டு விதிகள் மாறி விட்டன. ஒரு சாதாரணக் கடையில், சாதாரணத் தோசை தின்பதற்கு ஐந்து ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை, அடித்தட்டு மனிதன் வரிக் கொடுக்கும் கொடுமை இன்றைக்கு இருக்கிறது!

நடிகர் விசய், அண்ணாமலைக்கெல்லாம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு; அதாவது ஏறத்தாழ இருபத்தெட்டுப் பேர் கொண்ட படையின் பாதுகாப்புத் தேவைப்படுவதால், நாம் ஒவ்வொரு தோசையோடும் ரூபாய் எட்டு வரை வரிக் கொடுக்க வேண்டியதிருக்கிறது!

காலையில் விழித்தவுடன் கடைசித் தரத் தேயிலைத் தூளில் போடப்படும் அரை கிளாசு டீக்கும் தேயிலை வழியாக வரி; அதன் பின்னால் ஒரு பீடியை எடுத்து வாயில் வைத்தால் அதற்கும் வரி; அதைப் பற்ற வைக்கத் தீக்குச்சியை உரசினால் அதற்கும் வரி!

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Thoothukudi

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Thoothukudi

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

time to read

3 mins

November 03, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Translate

Share

-
+

Change font size