Try GOLD - Free
அன்பின் வழியது உயிர்நிலை
Dinamani Ramanathapuram & Sivagangai
|October 30, 2025
நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.
வெறுப்பு சார்ந்த எண்ணங்கள் மனதின் ஆழத்திலே நீறுபூத்த நெருப்பைப் போல் வேரூன்றி வீற்றிருக்கும். இதனால், பெரும் கேடுகள் விளையக்கூடும். வெறுப்பு உள்ள இடத்தில் அன்பு இருப்பதில்லை. ஒருவரிடம் ஒருவர் எத்தகைய பரிவும் இன்றி உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து போர் நடைபெறுகிறது. அதன் விளைவுகளையும் உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது. ஆங்காங்கே எல்லைத் தகராறுகள் வெடிக்கின்றன. உலகில் அமைதி நிலவ வேண்டும் எனில், மனிதனின் மனத்திலே அன்பு சுரக்க வேண்டும்.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு என்னும் உணர்வானது இயல்பாகவே அமைந்துள்ளது. அன்பு இல்லையெனில் வாழ்க்கைத் தொடர் என்பது அற்று விடும். அன்புதான் உடல் நலம், மனநலன் போன்றவற்றின் மேன்மையான நிலைக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அன்பிற்குப் பரந்த, விரிந்த ஆற்றல் உள்ளது. அன்பு அலைகளை இயற்கையிடம் பாயும்படிச் செய்தால், அதன் பயனாக உலகெங்கிலும் நல்ல விளைவுகளைத் தோற்றுவிக்க முடியும்.
கன்னடக் கவிஞர் குவெம்பு, 'செல்வம் உள்ளது, கல்வி உள்ளது விஞ்ஞானமும் கையில் உள்ளது சினம் மிக்க போர்க்களத்தின் செந்தழல் மருள் கொண்டு திரண்டு எழுந்த நிலை' என்று தன் கவிதையில் தற்காலச் சூழலை உள்ளவாறு வடித்துள்ளார்.
This story is from the October 30, 2025 edition of Dinamani Ramanathapuram & Sivagangai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
October 31, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
1 mins
October 31, 2025
Listen
Translate
Change font size
