Try GOLD - Free

சமூக ஒற்றுமையும் அரசமைப்பு சாசனமும்...

Dinamani Ramanathapuram & Sivagangai

|

July 14, 2025

அரசுகள் கொண்டுவரும் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பதை அரசுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால், அதற்கான மூலக் காரணத்தைத் தொட அரசுகள் மறுக்கின்றன.

- பேராசிரியர்

அறிவார்ந்த சமூகச் சிந்தனையாளர்கள் இன்று அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க அரசமைப்புச் சாசனத்தின் அடிப்படை விழுமியங்களை மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கக் கொள்கை ஒன்றை உருவாக்குங்கள் என்பதுதான் அந்தக் கோரிக்கை. இவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்; இவர்கள் ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று பணியாற்றிய சமூக உணர்வாளர்கள்.

ஏன் இந்தக் கோரிக்கையை வைக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் காட்டும் காரணமும், ஆதாரமும் யாராலும் மறுக்க இயலாது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அதிகாரத்தைப் பிடிக்க நடத்தப்படும் போட்டியில் வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள நம் அரசியல் கட்சிகள் செய்யும் செயல்கள் சமூக ஒற்றுமையைத் தகர்த்துக் கொண்டே வருகின்றன. அதுமட்டுமல்ல சமூகப் பிணக்குகளும், வன்முறையும் அதிகரித்து வருகின்றன.

சமூகப் பிணக்கும், சமூகப் பிரிவினைகளும், எல்லையில்லா ஏற்றத்தாழ்வுகளும், வன்முறையும் மக்களாட்சிக்கு எதிரான கூறுகள். இவை அனைத்தும் ஒரு நாட்டில் செயல்பட்டால் மக்களாட்சியில் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கொண்டு சேர்க்க இயலாது.

இந்தியாவில் 146 கோடி மக்களில் 82 கோடி மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்புக்குப் பொது விநியோகத் திட்டத்தில் கிடைக்கும் விலையில்லா உணவுப் பொருள்களை நம்பி இருப்பதும், 42 கோடி மக்கள் எந்தச் சமூகப் பாதுகாப்பும் இன்றி வாழ்வதும் இதன் விளைவுகள் தான்; இதைத்தான் உலக வங்கி நம்மைச் சரி செய்யக்கூறி அறிவுறுத்துகிறது. இந்தச் சூழல் மக்களாட்சிக்கும் நல்லதல்ல; சமூக ஒற்றுமை, அமைதி, மேம்பாடு இவற்றுக்கும் உகந்தது அல்ல.

இந்தச் சூழலை இனிமேலும் நாம் அனுமதித்தால் மக்களை நம் அரசியல் ஆளுகைச் செயல்பாட்டால் வன்முறைக்குள் தள்ளுகிறோம் என்பதுதான் பொருள். இந்த நிலையில்தான், நம் அரசியல் கட்சியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற அரசியலை முன்னெடுத்து, இந்திய மேம்பாட்டு வரலாற்றில் எந்தெந்த ஜாதிகள் மேம்பட்டிருக்கின்றன, எந்தெந்த ஜாதிகள் மேம்பட முடியவில்லை என்பதைக் கண்டறிய முயல்கின்றன.

MORE STORIES FROM Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size