Try GOLD - Free
இசை கலைஞரையும் கவரும் கலை!
Dinamani Pudukkottai
|September 14, 2025
உட்கார்ந்திருக்கும் மக்களைப் பார்த்து, தைரியமாகக் கதை சொன்னால், நல்ல அனுபவம் கிடைக்கும்! என்று சொல்லிவிட்டார்.
உட்கார்ந்திருக்கும் மக்களைப் பார்த்து, தைரியமாகக் கதை சொன்னால், நல்ல அனுபவம் கிடைக்கும்! என்று சொல்லிவிட்டார். என் ஏழாவது வயதில் என் குரு மற்றும் பெற்றோர் ஆசியோடு சென்னை மே. மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் எனது அரங்கேற்றம் நடைபெற்றது. அதன் பிறகு விஜய் டி.வி.யின் பக்தித் திருவிழாவில் பங்கேற்று கதை சொன்னேன். "சின்ன வயதிலும், இத்தனை அழகாக ஹரிகதை சொல்லுகிறாரே!" என்று பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளிலும் ஹரிகதை சொல்ல வாய்ப்புகள் வந்தன. அடுத்து, சபாக்களில் என் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். பிரம்ம கான சபா, நாரத கான சபா, மியூசிக் அகாதெமி என்று என்னுடைய தளம் விரிவடைந்தது.
எனது குரு காலமாகும் வரை அவரிடம் என்னுடைய பயிற்சி தொடர்ந்தது. அந்த ஒன்பது வருட காலம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கட்டம். என் தந்தையே ஒரு இசைக்கலைஞர் என்பதால், அவரிடம் பாட்டு கற்றுக் கொண்டேன். ஹரிகதை நடத்துவதற்கு அந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது. என்னுடைய குரு கமலா மூர்த்தியின் கதை சொல்லும் பாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் குருவின் குருவான திருவையாறு அண்ணாசாமி எனக்கு மகாகுரு. எம்பாரின் ஹரிகதைக்கு நான் பரம விசிறி.
This story is from the September 14, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size
