Try GOLD - Free
என்ன வளம் இல்லை நமது திருநாட்டில்?
Dinamani Nagapattinam
|July 08, 2025
அரசியல்வாதிகள் மனிதத் தலைகளைக் கணக்கிட்டு அவர்களின் அறிவார்ந்த, ஆரோக்கிய நிலைகளை உயர்த்தாது வெறும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு ஏழ்மையைப் போக்காது ஏழைகளை வளர்க்கின்றனர்.
அண்மையில் தில்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தெற்கு தில்லி செட்டில்மென்ட் எனப்படும் மதராஸி முகாமில் (கேம்ப்) உள்ள 400 வீடுகளில் 370 வீடுகள் இடிக்கப்பட்டன. காரணம், இந்த வீடுகள் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. மற்றொரு காரணம், பாரா புல்லா பகுதியின் மழைநீர் வடிகால் பாதை இந்த ஆக்கிரமிப்பு வீடுகளால் அடைபட்டு இருந்தது. இதனால், ஆண்டுதோறும் மழை, வெள்ள காலங்களில் அந்தப் பகுதியே மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
தில்லி அரசும் இவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகளை (அடுக்குமாடி குடியிருப்பு) கட்டி, இவர்களைக் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால், மதராஸி முகாமில் குடியிருந்தவர்கள் தற்போது தாங்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் குடியேறுவது, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்; தங்கள் குழந்தைகள் படிக்கவும், தாங்கள் வேலை செய்து பிழைக்கவும் இயலாது எனக் கூறி, குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல மறுத்து விட்டார்கள்.
இறுதியில் தில்லி அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பு உள்ள வீடுகளை இடித்து விட்டார்கள். இதனால் 400 குடும்பங்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சம்புக நேர்ந்தது. இதையறிந்த தமிழக அரசு வீடிழந்த மக்களை தமிழ்நாடு இல்லத்துக்கு வரச் செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடு குறித்தான ஆணை அல்லது அவர்களுக்கு வீடு ஒதுக்கவில்லை என்ற ஆணை, ஆதார் அட்டை பரிசோதித்து தலா ரூ.8000-ஐ அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்தது.
வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கியில் கணக்கு தொடங்க சிறப்பு முகாம் அமைத்தனர். தலா 27 கிலோ அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் இதர சமையல் பொருள்கள் அடங்கிய பையும் வழங்கப்பட்டது. மீளாத்துயரில் இருந்த மக்களுக்குத் தமிழக அரசு ஆறுதலளித்ததை வெகுவாகப் பாராட்டலாம்.
நாட்டின் தலைநகர் தில்லியில் எப்படி, இப்படி ஏழைத் தமிழர்கள் குடியேறினார்கள்? பிழைக்க, வேலை தேடி சுமார் 2,000 கி.மீ. தொலைவு வந்தவர்கள் சுமார் 20, 30 ஆண்டுகளாக மதராஸி முகாமில் குடியேறினர். பங்களாக்களில், வீடுகளில் வீட்டுத் தூய்மைப் பணி செய்வது, அவர்களது சொகுசு வாகனங்களைத் துடைத்துச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்வது தான் இவர்களின் வாழ்க்கை முறை.
This story is from the July 08, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Translate
Change font size
