Try GOLD - Free

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

Dinamani Dindigul & Theni

|

August 28, 2025

பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.

- கோதை ஜோதிலட்சுமி

கவனம் தற்போது இந்தியாவை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா தரும் புதிய வரிகளுக்கான அழுத்தம், மறுபுறம் ரஷ்யாவுடன் இருக்கும் எண்ணெய் வர்த்தகம், மற்றொருபுறம் சீனா உடனான போட்டி.

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கா விதித்த 50% கூடுதல் வரிவிதிப்பு அமலுக்கு வருமா, இந்தியா எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது? அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியுமா, ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் தொடருமா போன்ற வினாக்களுடன் உலகம் நம்மை உற்று நோக்குகிறது.

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் ஆக. 27-ஆம் தேதிமுதல் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்? அதற்கு முன்னதாக அமெரிக்காவுடன் சுமுகமான முடிவு எட்டப்படுமா? வினாக்களோடு இந்தியர்களான நாமும் காத்திருக்கிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இந்தியா புதிய வெளியுறவுக் கொள்கையைக் கொண்டு செயல்படுகிறது. ஜவஹர்லால் நேரு காலத்தில் அணிசாரா கொள்கை பின்பற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பன்முகக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பல கூட்டமைப்புகளிலும் இந்தியா பங்கு பெறுவது என்ற நிலைப்பாடுதான் அதற்குக் காரணம். உண்மையில் இந்தியாவின் கொள்கை பன்முகக் கூட்டணியதானா?

ஐரோப்பா, அமெரிக்க ஆதிக்கத்துக்கு இடம் கொடுத்துவிட்டது. டிரம்ப்பின் முடிவுகளால் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறது. ஆனால், இந்தியா தன்னை எந்த இடத்திலும் இறக்கிக் கொள்ளவில்லை. உலகின் வல்லரசுடன் சம நிலையில் நின்று பேச விரும்புகிறது.

எங்களுக்கான நட்பு நாடுகளை, வர்த்தகக் கூட்டாளிகளை வேறு எவரும் தீர்மானம் செய்ய முடியாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் இன்னும் சில நாள்களில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இந்தியா வந்து வெளியுறவுத் துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யப் பயணத்தை மேற்கொண்டார். பிரதமர் சீனா செல்ல இருக்கிறார்.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

'சிந்தட்டிக்' போதைப் பொருள்களைக் கண்டறிய தமிழக போலீஸாருக்கு புதிய வசதி

'சிந்தட்டிக்' போதைப் பொருள்களைக் கண்டறிய போலீஸாருக்கு 'கிட்' வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போதைப் பொருள் தடுப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

time to read

2 mins

November 17, 2025

Dinamani Dindigul & Theni

மண்டல-மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடைதிறப்பு

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்பட்டது.

time to read

2 mins

November 17, 2025

Dinamani Dindigul & Theni

ஆடுகளத்தை விமர்சிக்கக் கூடாது; திறமையை வளர்க்க வேண்டும்

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில், அதன் ஆடுகளத்தின் தன்மை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

time to read

1 min

November 17, 2025

Dinamani Dindigul & Theni

உணவே மருந்து!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு எனும் சர்க்கரை நோய். ஒவ்வொரு 10 விநாடிக்கும் சர்க்கரை நோய் தொடர்பாக ஒருவர் உயிரிழக்கிறார். புகைப்பதற்கு அடுத்தபடியாக மாரடைப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான். சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. இப்படி மனித வாழ்வின் தரத்தை வெகுவாகக் குறைக்கக் கூடிய சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை அறிவித்ததுதான் உலக சர்க்கரை நோய் தினம் (நவ.14).

time to read

2 mins

November 17, 2025

Dinamani Dindigul & Theni

எஸ்.ஐ.ஆரை எதிர்த்து தவெகவினர் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆர்.) எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

time to read

1 min

November 17, 2025

Dinamani Dindigul & Theni

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் சோதனை நடத்தி விசாரணை செய்கின்றனர்.

time to read

1 min

November 17, 2025

Dinamani Dindigul & Theni

காலத்தை வென்ற மரபுக் கவிதை!

மரபுக் கவிதை பல நூற்றாண்டுப் பாரம்பரியத்தை உடையது. பல்லாண்டு காலமாக இலக்கணக் கட்டுக்குள் நின்று கவிதை புனைந்து அதில் படைப்பின் முழுச் சுதந்திரத்தையும் அனுபவிப்பவர்கள் மரபுக் கவிஞர்கள்.

time to read

1 min

November 16, 2025

Dinamani Dindigul & Theni

ஈதலும் இசைபட வாழ்தலும்...

ஈகை என்பது தமிழர்கட்கு புதிதல்ல; சங்க காலத் தமிழரிடத்து வீரம், காதல், ஈகை என்ற விழுமியங்கள் ரத்தத்தோடு கலந்தவையாக இருந்தன. தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கையில் அகத்தில் காதலும், கருணையும் நிரம்பி வழிந்தன. புறத்திலோ வீரம் துள்ளி விளையாடி நின்றது. இவ்வரிய புகழாய்ந்த பீடுயர் பெருமைகளை விளக்கவல்ல பனுவல்கள்தாம் அகநானூறும் புறநானூறும்.

time to read

2 mins

November 16, 2025

Dinamani Dindigul & Theni

விலைவாசி உயர்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தார் டிரம்ப்

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி, காபி உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்குவதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time to read

1 min

November 16, 2025

Dinamani Dindigul & Theni

திரைப்படத் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்

இந்தியத் திரை உலகின் மூத்த கலை இயக்குநரான தோட்டா தரணி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். தனது திரையுலகப் பயணத்தில் அவரது நினைவில் நிற்கும் காட்சிகள், மனிதர்கள், இடங்கள் அனைத்தையும் வண்ணத்தில் குழைத்து ஓவியங்களாக்கி, கண்காட்சி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்.

time to read

2 mins

November 16, 2025

Translate

Share

-
+

Change font size