Versuchen GOLD - Frei
அருப்புக்கோட்டை, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைக் கோட்டை! சமூக நீதியும், சமத்துவமும் பிரிக்கப்பட முடியாத இரண்டு தத்துவங்கள்!
Viduthalai
|February 24, 2023
அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் பகுதிகளில் தமிழர் தலைவரின் கொள்கை விளக்கம்!
-
விருதுநகர், பிப்.24 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மறுபடியும் தொடங்கப்பட வேண்டும்’ ஆகியவற்றை விளக்கி நாடெங்கும் நடைபெற்று வரும் பரப்புரைப் பயணத்தில் அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்.
அருப்புக்கோட்டையில் தமிழர் தலைவர்!
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு, 23.2.2023 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற, சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாநில ப.க. எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ந.ஆனந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் இல.திருப்பதி, ப.க. மாநில துணைத் தலைவர் கா.நல்லதம்பி, சாத்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் பா.அசோக், மாவட்ட அமைப்பாளர் முரளி, மண்டல இளைஞரணி செயலாளர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் “மந்திரமா? தந்திரமா?'' நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
முதல் சுயமரியாதை திருமணம்!
எல்லா பகுதிகளிலும் உள்ள மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இரண்டு கூட்டங்களில் ஒன்று நகரத்திலும், மற்றொன்று கிராமத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரூராட்சி பகுதியான விளாத்திகுளத்தில் தமிழர் தலைவர் எடுத்த எடுப்பிலேயே, “இங்கே வந்து உங்களைக் காண்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.
“95 ஆண்டுகளுக்கு முன்னால், 1928 இல் இங்கேயிருக்கும் சுக்கில நத்தம் என்ற ஊரில்தான், ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து, பெண்ணடிமைத்தனத்தைப் போக்கவும், ஜாதி ஒழிப்பு, பிறவி பேதத்தை நீக்கவும் அந்தக் காலத்திலேயே முதல் சுயமரியாதை திருமணம் நடந்தது இங்குதான்!” என்று தனது மகிழ்ச்சிக்கான கொள்கைக் காரணத்தையும் சொன்னார்.
Diese Geschichte stammt aus der February 24, 2023-Ausgabe von Viduthalai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Viduthalai
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
1 mins
JUNE 06,2025
Viduthalai
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
1 min
JUNE 06,2025
Viduthalai
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
1 min
JUNE 06,2025
Viduthalai
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:
வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
1 min
JUNE 06,2025
Translate
Change font size
