பாலர் சுற்றுலா பள்ளிச் சுற்றுலா என்று கடந்து வந்த காலவோட்டத்தில் பல்கலை வந்த பின்னும் ஓர் மகிழ்வுச் சுற்றுலா. இரண்டாம் வருடத்தில் இரண்டாம் அரையாண்டு நகர்ந்து கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் 42ஆம் அணி மாணவர்கள் சீனியாறிட்டி(seniority) பெற்று பட்டாம்பூச்சிகளாய் பல்கலையில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தருணத்தில் 'மலையகம் நோக்கிய பயணம்' என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 42ஆம் அணி சுற்றுலா செல்வதற்கான முதற் கட்டமாக அதற்கென தனி வட்சப் குழு ஒன்றைத் திறந்து மாறி மாறி உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
சுற்றுலாவில் இடம்பெற வேண்டிய அனைத்து திட்டங்களும் வட்சப் குழுமத்தில் பேசி முடிந்து விட்டது. ஆனால், சுற்றுலாதான் எப்போது? என்ற ஏக்கத்தில் பலரை போன்று நானும் ஒருவனாய் காத்திருந்தேன். நாட்கள் சில நகர்ந்த பின் அந்த குழுவில் திட்டமிட்டபடி சுற்றுலாவிற்கு புறப்பட தயாராகினோம்.
வழமை போன்று அது ஒரு வெள்ளிக்கிழமை. அதிகாவை இரண்டு மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பாக அனைவரும் வந்து நின்றோம். எப்படியும் நம்மட கம்பஸ் பெடியள் இரண்டு மணி என்று சொன்னால் மூன்று மணிக்குத்தான் வருவாங்கள் என்பது எம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அவ்வாறிருக்க அதிகாலை மூன்று மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம். 60 பேருடன் பயணிக்க வேண்டிய சுற்றுலா திடீரென 70 ஆக மாறியது. இருந்தபோதும் தாம் அனைவரும் நல்ல சிநேகிதங்கள் என்ற படியால் 'சமாளிச்சு போகலாம், ஏறுங்கடா மச்சான்" என்று அனைவரையும்பேரூந்தில் ஏற்றி விட்டோம்.
Diese Geschichte stammt aus der April 22, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April 22, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
துருக்கி நாட்டு ஜனாதிபதி ஆவேசம்
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஐ.நா. அமைப்பை துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏழாமிடத்துக்கு முன்னேறிய பட்லர்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் முன்னேறியுள்ளார்.
ஜூன் முதலாம் திகதி இறுதிக்கட்ட தேர்தல்
இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதமர் நாற்காலியில் அமரப் போவது யார் என்பது குறித்து மக்கள் தீர்ப்பு எழுதி வருகின்றனர்.
மயங்கி விழுந்த சிறுவன் மரணம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய சிறுவன் புதன்கிழமை (29) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எமது கட்சிக்கு யாரும் அரசியல் பாடம் எடுக்க தேவையில்லை"
ஜனநாயகத்தின் தாயகமே ஐக்கிய தேசியக் கட்சிதான். எனவே, ஜனநாயகம் பற்றி எமது கட்சிக்கு யாரும் அரசியல் பாடம் எடுக்க தேவையில்லை.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மாற்றத்துக்கு விரிவான திட்டம்
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக ஊழியர்களை பணிக்குத் திரும்ப பணிப்பு
நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணித்துள்ளார்.
சுழிபுரத்தில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்
சுழிபுரம் - திருவடிநிலை காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து வியாழக்கிழமை (30) கைவிடப்பட்டது.
தேயிலை, கோப்பி பிரச்சினை தீவிரம்
களத்துக்குச் சென்றார் ஜீவன்
“அடாவடியில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை”
யாழ். போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இனி வரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.