Versuchen GOLD - Frei

கொய்யா சாகுபடியில் ஆர்வம் காட்டும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்

Dinamani Villupuram

|

August 06, 2025

மருத்துவ குணமிக்க கொய்யா சாகுபடியில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

- கு. வைத்திலிங்கம்

விழுப்புரம், ஆக.5: குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து வருமானம் கிடைத்தல், அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு மானியம், தரிசு நிலங்களில் தொகுப்பாக சாகுபடி செய்வதற்கு முழு மானியம் போன்றவை தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படுவதே கொய்யா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதற்கு காரணம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர், கண்டமங்கலம், மேல்மலையனூர், செஞ்சி, ஒலக்கூர் போன்ற ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொய்யா சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் கொய்யா பழங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

தோட்டக்கலைத்துறை உதவி: விழுப்புரம் மாவட்டத்தில் கொய்யா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கொய்யா பதியம், இடுபொருள்கள் போன்றவை தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அவர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவுக்கு ஏற்றவாறு பதியத்தை வழங்கும் தோட்டக்கலைத்துறை, அடர் நடவு முறை மேற்கொண்டால் ஹெக்டேருக்கு ரூ.48 ஆயிரம் மானியத்தையும் வழங்கி வருகிறது. மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை கொய்யா மரங்கள் பலன் தரும் என்பதால் விவசாயிகள் தொடர்ந்து வருவாய் பெற முடியும் எனக் கூறும் தோட்டக்கலைத்துறை, அதற்கான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Villupuram

Dinamani Villupuram

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Villupuram

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Villupuram

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Villupuram

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Villupuram

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Villupuram

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size