Versuchen GOLD - Frei

வீணாகும் விளைச்சல்!

Dinamani Tirunelveli

|

October 27, 2025

இந்தியா ஒரு விவசாய நாடு; கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். அவர்கள் தங்களுக்காக வாழவில்லை; அனைத்து மக்களுக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால், அந்த விவசாயமும் விவசாயிகளும் படும்பாடு என்னென்பது?

- உதயை மு. வீரையன்

மிகப்பெரிய அரசு நிர்வாகம் இருந்தும், அதற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் இருந்தும் ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதைத் தடுக்க முடியவில்லை.

ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 10,000 முதல் 20,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றன. நெல்லை அறுவடை செய்து எடுத்தபிறகு நெல் கொள்முதலுக்காக நீண்ட காத்திருப்பில் சாலைகளில் கொட்டி வைக்கப்பட்ட நெல்மணிகள் அழிந்து போவதற்கு யார் பொறுப்பு? அல்லது யார் காரணம்?

ஓர் ஏக்கர் பயிர் உற்பத்திக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை கடன்கள் வாங்கிச் செலவழித்துப் பயிர் செய்து கண்ட பயன் என்ன? 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்பது அன்று முதல் இன்று வரை கொஞ்சமும் மாறவில்லை.

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்குகின்றன. விவசாயிகள், தங்கள் நெல்லை விற்க, இந்த நிலையங்களை அணுக வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதளம் மூலம் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து, தங்கள் நெல்லை விற்கப் பதிவு செய்யலாம்.

விவசாயிகளின் நலனுக்காக நாடு முழுவதும் பல இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அமைத்துள்ளது. கொள்முதல் நிலையங்கள் தொடர்பான புகார்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.

மழை மற்றும் காத்திருப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க சில நேரங்களில், விளைநிலங்களுக்கே சென்று நெல்லை வாங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

2025-ஆம் ஆண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் விலை குறித்த தற்போதைய நிலவரம் தமிழக அரசு சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தியுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,369 ஆகும். தமிழ்நாட்டில் அரசு வழங்கும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து இந்த விலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tirunelveli

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tirunelveli

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tirunelveli

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size