Versuchen GOLD - Frei
கையறுநிலையில் கப்பல் ஊழியர்கள்
Dinamani Thanjavur
|September 04, 2025
உலக அளவில் வணிகக் கப்பல்களில் பணிபுரியும் ஊழியர்களில் இரண்டாவது இடம் இந்தியர்களுக்கே.
அதேசமயம், கைவிடப்படும் கப்பல் பணியாளர்களின் எண்ணிக்கையில் நமது தேசம் முதல் இடம் வகிப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகாது.
நாம் அனைவரும் வசிக்கிற இப்புவியானது ஆழி சூழ் உலகு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், பூமியின் பரப்பளவில் சுமார் 30% பரப்பு மட்டுமே தரைப் பகுதியாகும். மீதமுள்ள 70% தண்ணீரே, அதாவது கடல் பகுதியே ஆக்கிரமித்திருக்கிறது.
உலக நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களைப் பெருமளவில் சுமந்து செல்லும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்கும் இந்தக் கடற்பரப்பே ஆதாரமாக விளங்குகிறது.
உலகெங்கிலும் உள்ள மீனவர்கள், வணிகக் கப்பல்களின் ஊழியர்கள் ஆகியோரின் வாழ்வும், தாழ்வும் கடலையே நம்பி இருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படைகளில் பணிபுரியும் வீரர்களும் கடலை நம்பி இருப்பவர்கள்தாம். ஆனால், அவ்வீரர்களின் பணிப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், பணி ஓய்வுக் காலம் ஆகியவற்றுக்கு அந்தந்த நாட்டு அரசுகள் உத்தரவாதம் வழங்குகின்றன.
ஆனால், மற்றவர்கள் விஷயத்தில் இப்படிச் சொல்வதற்கில்லை. மீன்பிடித் தொழிலானாலும் சரி, வணிகக்கப்பல்களில் வேலை செய்வதானாலும் சரி, ஒருமுறை கடலில் இறங்குபவர்கள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு யாரும் உத்தரவாதம் அளித்து விட முடியாது.
கடல் சீற்றம், பெருமழை, புயல், கடற்கொள்ளையர்களின் அட்டகாசம், வேற்று நாட்டுக் கடற்படையினரின் நடவடிக்கைகள், தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகிய பல காரணிகள் இந்தப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு நாள் வாழ்வையும் நிச்சயமற்றதொரு சூழலுக்குள் தள்ளுகின்றன.
Diese Geschichte stammt aus der September 04, 2025-Ausgabe von Dinamani Thanjavur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thanjavur
Dinamani Thanjavur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Thanjavur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Thanjavur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Thanjavur
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Thanjavur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Thanjavur
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Thanjavur
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Thanjavur
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Thanjavur
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Thanjavur
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Translate
Change font size
