Versuchen GOLD - Frei
தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!
Dinamani Puducherry
|March 25, 2025
அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.
தமிழகத்தினுடைய நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில், நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்கிற வகையில், நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்கி இருக்கிறது. இதனால் 2025-26-ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் தொகை ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் 70 ஆயிரத்து 753 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டியதிருக்கும். இவ்வாறாகக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது ஒவ்வொரு தனிநபர் மீதும் 1.25 லட்சம் ரூபாய் கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கும்.
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இவைதானோ? ஒவ்வொரு தனிநபரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் கடனைத்தான் இவ்வாறாகத் தமிழக அரசு பெருமை பொங்கப் பேசுகிறதோ?
நான்காண்டுகளாக மடிக்கணினித் திட்டம் நிறுத்தப்பட்டு தற்போது அதற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இனி 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அல்லது கைக்கணினிகள் வழங்கப்படும் என்று சொல்வது தேர்தலுக்கான நோக்கமாக இருக்குமே தவிர, வேறு எதுவாக இருக்க முடியும்? பந்தி முடிந்த பிறகு பசியாற வந்த விருந்தாளியைப் போல, சந்தை முடிந்த பிறகு சரக்கு வாங்க வந்த வியாபாரியைப் போல, தேரோட்டம் முடிந்த பிறகு, திருவிழாவைக் காண வந்த பக்தனைப் போல, வாக்குப்பதிவு முடிந்து விட்ட பிறகு வாக்களிக்க வந்த வாக்காளனைப் போல, நோயாளி மடிந்து விட்ட பிறகு, மருந்து வாங்கி வந்த உறவினரைப் போல, யாது செய்வது, எதைச் செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்.
அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படுகிற திட்டமாக இவை சொல்லப்படுகிறது. ஆனால், திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்குவது சாத்தியமில்லை என்பதே உண்மையாகும்.
பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2,562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. போதிய நிதியும் ஆசிரியரும் இல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்களை உலகத் தரத்துக்கு மாற்றவா முடியும்? உள்ளூர் தரத்தையே அவர்கள் பெற இயலாமல் போகும்.
Diese Geschichte stammt aus der March 25, 2025-Ausgabe von Dinamani Puducherry.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry
Dinamani Puducherry
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Puducherry
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Puducherry
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size
