Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை

Dinamani Nagapattinam

|

April 21, 2025

மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.

- முனைவர் வைகைச்செல்வன்

இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும், மத்திய மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தாக்கலைத் தொடர்ந்து, துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறும் இந்த வேளையில், 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், மாநில அரசின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு பறித்து வருவதாகவும், மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து வருவதையும் குறிப்பிட்டார். மாநில சுயாட்சி, மாநிலங்கள் அதிகாரம் குறித்துப் பட்டியலிட்டார்.

மத்தியில் 18 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து அதிகாரத்தைச் சுவைத்தது திமுக என்பது கடந்தகால வரலாறு. அப்போதெல்லாம் இந்தப் பிரச்னைகளை எழுப்பாது, தேர்தல் நெருங்கிவிட்ட வேளையில் உரிமைகளைப் பேசுவதும், மாநில அதிகாரங்கள் குறித்துப் பகிர்வதும் திமுகவின் வாக்குவங்கி அரசியலை நோக்கியதான நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையிலும், அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையிலும், மிக முக்கியமான துறைகள் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டுப் பெற முடிந்த திமுகவால், கச்சத்தீவை மீட்பதற்கோ, ஈழத் தமிழர் நலன் குறித்தோ, இரு மொழிக் கொள்கை குறித்தான அரசியல் சட்டத்தில் நிலையான இடத்தைத் தருவதற்கோ, நதிநீர் உரிமைகள் குறித்தோ அப்போது எதுவும் பேசாமல், 'தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற' கதையாக திடீரென்று ஞானோதயம் வந்துவிட்டதைப் போல மாநில உரிமைகளைப் பற்றி இப்போது பேசுகிறது திமுக. அதிகாரத்தில் இருந்தபோது இந்தப் பிரச்னையை எழுப்பவில்லை என்பதற்கு இதுபோன்ற பிரச்னைகள் அப்போது எழவில்லை என்று மிக லாகவமாகத் தப்பிக்க முயல்கிறார்கள்.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அந்தத் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி பரப்புரை மேற்கொண்டார். ஆனால், அதன் ரகசியத்தை இன்றுவரை அவர் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

திருவண்ணாமலை மலை மீது நாளை மகா தீபம்

மருத்துவ வசதிகளை அறிய 'க்யூஆர்' குறியீடு

time to read

1 mins

December 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Nagapattinam

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Nagapattinam

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Nagapattinam

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size