நமது சிறப்பு நிருபர்
பம்பரம் சின்னம் கேட்டு போராடுவது, கூட்டணி தலைமையுடன் முரண்பாடு எழாமல் உறவைக் காப்பது, நேரடி தேர்தல் கள அனுபவத்தை எதிர்கொள்வது, வாரிசு அரசியல் குற்றச்சாட்டை சமாளிப்பது என பன்முக அழுத்தங்களுக்கு மத்தியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இடையே தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து...
மதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள விருதுநகர் தொகுதியில் நிற்காமல் திருச்சி மக்களவைத் தொகுதியைத் தேர்வு செய்தது ஏன்?
1998, 1999 என தொடர்ந்து இரு முறை சிவகாசி தொகுதியில் எனது தந்தை வைகோ வெற்றி பெற்றார். 2004-இல் மூன்றாவது முறையாகவும் மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் வென்ற தொகுதி அது. ஆனால், தொகுதி மறுசீரமைப்பால் சிவகாசி தொகுதியே இல்லாமல் போனது. அதிலிருந்த பேரவைத் தொகுதிகளான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி எம்.பி. தொகுதிக்கும், கோவில்பட்டி தூத்துக்குடி எம்.பி. தொகுதிக்கும் சென்றுவிட்டன. சிவகாசி, சாத்தூர், விருதுநகரை உள்ளடக்கி விருதுநகர் எம்.பி. தொகுதி ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஒரு தொகுதி என்ற குறுகிய வட்டத்துக்குள் மதிமுக-வை அடைத்துவிடக் கூடாது.
வாரிசு என்பதால் மதிமுகவில் வெகு விரைவில் உங்களுக்கு உயர் பதவி கிடைத்து விட்டதாக சொல்கிறார்களே?
அரசியலுக்கு வரும் விருப்பமோ, ஆசையோ, வேட்கையோ எனக்குத் துளியும் கிடையாது. 2019 மக்களவைத் தேர்தலில் தந்தையின் சுற்றுப்பயணத்தையும், இதர தேர்தல் களப் பணிகளையும் நான் திட்டமிட்டு தொண்டர்களுடன் பணியாற்றினேன். அதனால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள், என்னை கட்சிப் பதவியில் அமர்த்த குரல் கொடுத்தனர். பெரும்பான்மை ஜனநாயகத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதால் வேறுவழியின்றி அவர்களின் கோரிக்கையை தந்தை ஏற்றுக் கொண்டார். நிர்வாகக் குழுவில் உள்ள 106 பேரில் 104 பேர் என்னை ஆதரித்தனர். பின்னர், கட்சியின் தலைமை நிலையச் செயலர் பதவி, பின்னர் முதன்மைச் செயலர் பதவி, இப்போது, திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் ஆக நிற்கிறேன்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது மதிமுக-வின் விருப்பப் பட்டியலில் திருச்சி இருந்ததா?
Diese Geschichte stammt aus der March 27, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 27, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி
ஆஸ்டபென்கோ, கசாட்கினா தோல்வி
மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்
‘வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு
கோவை, வெள்ளிங் கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட 3 மாத காலம் நிறைவடைந்த தால் மலையேறும் பாதையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை மூடி அறிவிப்புப் பலகை வைத்தனர்.
பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்
சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ரூ.3 கோடி பொருள்கள் சேதம்
சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'
சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை ரூ.500-க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் எளிதாக சாலையைக் கடக்க புதிய மேம்பாலம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு
இன்று இறுதிக்கட்ட தேர்தல்
வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது
பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு
வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா்.