CATEGORIES
Categories
பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
தேர்தல் பிரபொதுக்கூட்டத்தில் பேசியபோது முஸ்லிம்கள் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கி ழமை புகார் அளிக்கப்பட்டது.
கேண்டிடேட்ஸ் செஸ்: வரலாறு படைத்தார் குகேஷ்
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான குகேஷ் சாம்பியன் ஆனாா்.
சூரத் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
குஜராத் தின் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் சந்திரகாந்த் தலால் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 25,000 அரசுப் பள்ளி ஆசிரியர், அலுவலர் நியமனங்கள் ரத்து - சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் 25,000 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனங்களை திங்கள்கிழமை ரத்து செய்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், அந்த நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
13 மாவட்டங்களில் தொடரும் பறக்கும் படை சோதனை - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகளின் ஒரு பகுதியாக, 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் தொடரும் என்றும், இந்தச் சோதனைகளில் 171 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
வறண்டது வீராணம் ஏரி
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாலைவனம்போல் காட்சியளிக்கிறது.
7,500 தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
எஸ்.ஆர்.எம். மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். மருந்தியல் கல்லூரியில் சிட்டஸ் மருந்தியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
செஸ் வீரர் குகேஷுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்த தமிழகத்தைச் சோ்ந்த செஸ் வீரா் குகேஷுக்கு ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
மக்கள் சொத்துகளை பறித்து பகிர்ந்தளிக்க காங். திட்டம்: பிரதமர்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சொத்துகளை அக்கட்சி பறித்து பகிா்ந்தளிக்கும் என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை மீண்டும் சாடினாா்.
சியாச்சின் பனிமலையில் ராஜ்நாத் சிங்
உலகிலேயே உயரமான போர்க்களமாகக் கருதப்படும் சியாச்சின் பனிமலைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டு, அங்கு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்தார்.
மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
ஐபிஎல் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.
இஸ்ரேல் உளவுப் பிரிவு தலைவர் ராஜிநாமா
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு பொறுபேற்று, அந்த நாட்டு ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவா் அஹரோன் ஹலிவா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பாகிஸ்தானில் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.
பழங்குடியினரை அச்சுறுத்தும் பாஜக - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
பழங்குடியினருக்கு பாஜக அச்சுறுத்தல் விடுத்து வருகிறது என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
'தவறுகளுக்காக தண்டிக்கப்படும் காங்கிரஸ்'
‘காங்கிரஸ் தனது தவறுகளுக்காக நாட்டு மக்களால் தண்டிக்கப்பட்டு வருகிறது; அக்கட்சியின் நிலைமை மிக மோசமாக உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: ஒழுங்காற்று ஆணையம்
மருத்துவ காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கு தற்போது உச்ச வயது வரம்பு 65-ஐ இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) ரத்து செய்துள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழாவையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோடையில் பரவும் பாக்டீரியா, காய்ச்சல் பாதிப்புகள்
கோடை காலத்தில் பாக்டீரியாக்கள், கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 724 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா்.
பறவைக் காய்ச்சல் தடுப்பு: களியக்காவிளை அருகே சோதனைச் சாவடி
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கால்நடைத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து
காங்கிரஸின் மக்களவைத் தோ்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எந்த வாக்குறுதியும் இடம்பெறாத நிலையில், மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அந்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
உலகில் உண்மை, அஹிம்சையை முன்னிறுத்தும் இந்தியா!
‘உலகின் பிரச்னைகளுக்கு தீா்வாக, உண்மை மற்றும் அஹிம்சை கோட்பாடுகளை முன்னிறுத்துகிறது இந்தியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தூர்தர்ஷன் இலச்சினை விவகாரம்: மம்தா கண்டனம்
தூா்தா்ஷன் தொலைக்காட்சியின் இலச்சினை காவி நிறத்தில் மாற்றப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை
சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் மீண்டும் வெற்றி நடை
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 37-ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மீண்டும் வெற்றிப் பயணத்தை தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ்.
ராஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு
தெற்கு காஸாவின் ராஃபா நகரில் இஸ்ரேல் சனிக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 போ் உயிரிழந்தனா். அவா்களில் 18 போ் குழந்தைகள்.
இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்?
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில்
'சிறையில் கேஜரிவால் உயிருக்கு ஆபத்து'
அமைச்சா குற்றச்சாட்டு