يحاول ذهب - حر

சம உரிமை - சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி!

March 08,2023

|

Viduthalai

உலக மகளிர் நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

சம உரிமை - சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி!

சம உரிமை - சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி என்று உலக மகளிர் நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

இன்று (மார்ச் 8) - உலக மகளிர் நாள்!

மகளிர் - மக்கள் தொகையில் சரி பகுதி - மானுடத்தின் சம பிரிவு.

அவர்கள் நிலை இன்றும், அறிவியல், மின்னணுவியல் வளர்ந்த நிலையிலும், இந்த பரந்துபட்ட ‘பாரத நாட்டில்' எப்படி இருக்கிறது?

1926 இல் உலகப் புரட்சியாளரான தந்தை பெரியார், தான் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் முதற்கொள்கை ‘‘பேத ஒழிப்பு'' என்றார்!

பிறவிப் பேத ஒழிப்பு முக்கியம்!

பிறவி பேத ஒழிப்பு - உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற பேதம் மட்டுமல்ல; பிறவியினால் ஆண் என்பவன் உயர்ந்தவன், பெண் அவனுக்கு அடிமை என்ற பேதத்தையும் சேர்த்து ஒழிப்பதே பிறவி பேத ஒழிப்பு என்பது.

மக்கள் தொகையின் சரி பகுதியான பெண்கள் மானுடப் பிரிவு அடிமைகளாக, மாக்கள்போல அடமானப் பொருள்களாக, மீள முடியாத உரிமையற்ற பேதத்தில் பெரும் சுகம் காணுபவர்களாக அவர்களை இந்த நாட்டு சனாதனமும், வர்ணதர்மமும் ஆக்கி வைத்திருப்பதிலிருந்து விடுதலை பெற்று, சமத்துவமும், சம உரிமையும் பெற்றிருக்கிறார்களா?

தோற்றத்தில் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தீண்டாமை ஒழிப்புபோல இதுவும் ஒரு ‘ஒப்பனையான' வெளித்தோற்றமே!

ஓரளவுக்கு அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள வாழ்வுரிமை, படிப்புரிமை, பணி உரிமை, அரசியல், பதவி உரிமையெல்லாம் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர் களாலும், அவர்களது போராட்டத்தினாலும், சமூகத்திலும், சட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள், பிரிட்டிஷ்காரர்களை எவ்வளவு குற்றம் சொன்னாலும், அவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் கொண்டு வந்து நிறைவேற்றிய சட்ட திட்டங்களும் காரணமாகும்!

المزيد من القصص من Viduthalai

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்

மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

time to read

1 mins

JUNE 06,2025

Viduthalai

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு

அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்

வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:

வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது

இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

time to read

1 min

JUNE 06,2025

Translate

Share

-
+

Change font size