يحاول ذهب - حر
ரமலான் பண்டிகை: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
April 01, 2025
|Dinamani Virudhunagar
ரமலான் பண்டிகையையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினர்.
-
சிவகங்கை/மானாமதுரை/திருப்பத்தூர்/காரைக்குடி/ராமேசுவரம்/திருவாடானை, மார்ச் 31: ரமலான் பண்டிகையையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினர்.
சிவகங்கை நகரில் வசிக்கும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிவகங்கை-மதுரை சாலையில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை நடத்தினர். முன்னதாக, சிவகங்கை நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து பள்ளிவாசல் தலைவர் காஜா முஹைதீன் தலைமையில் ஊர்வலமாக ஈத்கா திடலை வந்தடைந்தனர். அங்கு மௌலவி சுல்தான் ஹயிரி சொற்பொழிவாற்றினார். சிறப்புத் தொழுகையை தலைமை இமாம் மௌலவி முஹம்மது பிலால் நடத்தினார். மௌலவி மன்சூர் ஹுசேன் சிறப்பு பிரார்த்தனையை தொடங்கிவைத்தார். இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ரமலான் பண்டிகையையொட்டி, நேரு பஜாரிலிருந்து மதுரை சாலையில் உள்ள ஈத்கா மைதானம் வரை ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், மானாமதுரை, திருப்புவனம், பழையனூர், புழுதிப்பட்டி, தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், நெற்குப்பை, பூலாங்குறிச்சி, கல்லல், திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் பண்டிகையையொட்டி, அந்தந்தப் பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பிறகு, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
هذه القصة من طبعة April 01, 2025 من Dinamani Virudhunagar.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Virudhunagar
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Dinamani Virudhunagar
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.
1 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Virudhunagar
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Translate
Change font size
