يحاول ذهب - حر
இந்தியா வெறும் கல்விச் சந்தையல்ல!
August 20, 2025
|Dinamani Tiruchy
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியச் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், தங்கள் சொந்த நாட்டின் பாடத்திட்டங்களை அப்படியே இங்கே திணித்தால், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அறிவு மரபுகளையும், தனித்துவமான கலாசார செழுமையையும் அவை புறக்கணிக்கக்கூடும்,
பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள கிஃப்ட் சிட்டி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற இந்திய பெருநகரங்களில் தங்கள் வளாகங்களை அமைக்கும் திட்டங்கள், இந்திய உயர் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன. உலகளாவிய கல்வி மையமாக உருவெடுக்கும் இந்தியாவின் லட்சிய பயணமாக எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த நோக்கம் மிகவும் பாராட்டுக்குரியது என்றாலும், இதில் சில முக்கியக் கவலைகள் உள்ளன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் நாடுகளில் உலகளாவிய புகழ் பெற்றிருப்பதற்குக் காரணம், அங்கே இது ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. அதேநேரம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்திய வருகை, ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்புகிறது. இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் இந்திய மாணவர்களுக்கு அறிவைப் போதிக்கும் இடங்களாக மட்டுமே இருக்குமா? அல்லது இந்தியக் கல்வி முறையிலிருந்தும், நமது கலாசாரத்திலிருந்தும் அவர்களும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்களா? அதாவது, இருதரப்புக்கும் பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் தளமாக அவை மாறுமா? என்பதுதான் அது.
இந்திய உயர் கல்வித் துறையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் காலடி வைப்பதற்கு வழிவகுத்த பின்னணியிலிருந்து தொடங்குவது, இந்த புதிய அத்தியாயத்தின் நோக்கத்தையும் தாக்கத்தையும் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும். உலகத் தரவரிசையில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்கலாம் என்ற தொலைநோக்குத் திட்டத்தை 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை முன்மொழிந்தது. இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2023-இல் இதற்கான விரிவான விதிமுறைகளை வகுத்தது.
இந்த விதிமுறைகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சில முக்கியச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், அவை தங்கள் சொந்த நாட்டு வளாகங்களில் வழங்கும் பட்டங்களுக்குச் சமமான பட்டங்களை இந்தியாவிலும் வழங்க முடியும். மேலும், ஊழியர்களை நியமிப்பது, நிதி நிர்வாகம் மற்றும் கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் அவற்றுக்குக் கணிசமான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.
هذه القصة من طبعة August 20, 2025 من Dinamani Tiruchy.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruchy
Dinamani Tiruchy
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruchy
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruchy
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruchy
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruchy
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tiruchy
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruchy
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tiruchy
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruchy
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Tiruchy
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Translate
Change font size
