استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

அத்வைதம் - வெற்றிக்கு வழி!

March 04, 2025

|

Dinamani Dharmapuri

முழுமனதோடு ஆணித்தரமாக நம்பும் ஒன்றை 'வேதவாக்கு' என்று சொல்வது வழக்கம். வேதவாக்கு என்றால் என்ன? வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள். ஆக, வேதங்கள் சொல்வதே நமக்குப் பிரதானம். ஏன் வேதங்கள் நம் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

- கோதை ஜோதிலட்சுமி

தத்துவம் என்பதை வேதாந்தம் என்று சொல்கிறோம். வேதம், அந்தம் என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து வேதாந்தம் ஆகிறது. வேதத்தின் இறுதிப் பகுதியாக வருவதனால் இப்பெயர் ஏற்பட்டது. வேதத்தின் முடிந்த முடிவாக இருப்பதனாலும் வேதாந்தம் என்று சொல்லலாம். உபநிஷதங்கள் என்றும் இதனைச் சொல்கிறோம்.

வேதாந்தத்துக்கு நம் அன்றாட வாழ்வில் அவசியம் இருக்கிறதா? தத்துவம் எல்லாம், வாழ்க்கையே வெறுத்துப் போனவர்கள் பேசுவதும் படிப்பதும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்? ஆனால், வேதவாக்குக்கு எப்படி அன்றாட வாழ்வில் இத்தகைய மதிப்பு உண்டாயிற்று? எனில், உலகியல் வாழ்க்கையில் இதற்கு இடம் உண்டா?

வேதம் சொல்லும் தத்துவம் அத்வைதம். இந்தத் தத்துவமானது 'நான் யார்?' என்ற ஆன்மத் தேடலுக்கு விடை சொல்வது என்று கேட்டிருப்போம். ஆனால், இது ஆன்மத் தேடலோடு நம் அன்றாட வாழ்வை வெற்றிகரமாக வாழ்வதற்கும் கற்றுத் தருவது ஆகும். சமூக வாழ்க்கை சிறக்கவும், தனிமனித வாழ்க்கை மேம்படவும் இது உதவும்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூகம் மலர அத்வைதம் வழிகாட்டுகிறது. அத்வைதம் என்றால் இரண்டாக இல்லாமல் இருப்பது என்று பொருள். அதாவது, இந்த மண்ணின் ஜீவன்கள் அனைத்தும் ஒன்றே, வேறுவேறானவை அல்ல. இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள பாரதி, காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம் என்று விளக்கினார். அதாவது, அத்வைதம் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும் தாண்டி இந்த உலகமே ஒரே பொருள் என்கிறது.

'யஸ்தே கந்தஹ புருஷேணு ஸ்த்ரீஷு பும்ஸுஹு பாகோ ருசிஹி யோ அஸ்வேஷு வீரேஷு யோ ம்ருகேஷுத ஹஸ்திஷு கன்யாயாம் வர்சோ யத் பூமே தேனாஸ் மாம் அபி ஸம் ஸ்ருஜ மா நோத்விக்ஷத கஸ்சன' இது அதர்வண பூமி சூக்த 25-ஆம் மந்திரம். இதன் பொருள், உன் மணம் ஆண்களிடத்தும் பெண்களிடத்தும் உள்ளது. உன் ஆண்மையும் கம்பீரமும் மக்களிடத்தில் உள்ளது. அது வீரனிடத்திலும் குதிரையிலும் காணப்படுகிறது. அதை வனவிலங்கிடமும், யானையிடத்திலும் காணலாம். உன்னுடைய பிரகாசம் இளம் பெண்களிடத்தில் மிளிர்கிறது, இத்தனையையும் எனக்குக் கொடு, என்னை எவரும் வெறுக்காமல் இருக்கட்டும்.

المزيد من القصص من Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Dharmapuri

இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு

டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

எண்ம கைது மோசடி வழக்குகள்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, டிச.1: நாடு முழுவதுமான எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க சிபிஐ திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Translate

Share

-
+

Change font size