استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

ஊழல் என்னும் நச்சுமரம்!

December 20, 2024

|

Dinamani Chennai

ஊழல் இல்லாத இடமே இல்லை. உலகளாவிய ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் மூலம் ஊழலின் அளவு வெளியிடப்பட்டு வருகிறது.

ஊழல் என்னும் நச்சுமரம்!

அதன் 2023 அறிக்கையில் உலகம் முழுவதும் ஊழல் அதிகரித்து வருவதாகவும், ஊழல் நிலையில் மொத்தம் 180 நாடுகளில் இந்தியா 93-ஆம் இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு ஒப்பந்தம் கையொப்பமானது. இது சர்வதேச ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு மற்றும் சொத்து மீட்பு, தண்டனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை உறுதி செய்கிறது. இதில் லஞ்சம் வாங்குதல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், மற்றவர்கள் மத்தியில் தேவையற்ற செல்வாக்கை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் உலகின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனைவரின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய ஊழல் இல்லாத நிறுவனங்கள் அவசியம்.

உலகம் முழுவதும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான பயனுள்ள உத்திகளை, குறிப்பாக வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள ஜி 20 ஊழல் எதிர்ப்புப் பணிக் குழு முடிவு எடுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால், ஊழல் என்பதை அங்கீகரிப்பது அவசியம். மேலும் ஊழலுக்கான தீர்வுகள் ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது.

உலகம் எங்கும் ஊழல் ஒழிப்பு நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஒரு நாடு எப்போது ஊழலற்ற நாடாக மாறுகிறதோ அப்போதுதான் அந்த நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் வளர்ச்சியடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நாட்டில் நடக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டியது அரசின் முக்கியக் கடமையாகும்.

உலக நாடுகளில் ஊழல் என்பது மிகப் பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? ஊழல் காரணமாக உலகத்தில் மக்களாட்சி மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது. அரசு கொண்டுவரும் எல்லாத் திட்டங்களும் விழலுக்கு இறைத்த நீராக மாறி வருகின்றன.

இந்தியா மக்கள் தொகையில் பெரிய நாடாக இருப்பது போலவே, ஊழலிலும் பெரிய நாடாக இருக்கிறது. இது பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கவே செய்யும்.

المزيد من القصص من Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா

எலான் மஸ்க் கருத்து

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size